tamilnadu

img

எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

திருப்பரங்குன்றத்தில் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் இரு சமூக மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பா.ஜ.க மூத்தத் தலைவர் எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் மதுரை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் காலம் காலமாக ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி கொடுப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், இந்து முன்னணி உள்ளிட்ட சங்பரிவார் கூட்டத்தின் மிரட்டல் காரணமாக, கந்தூரி கொடுப்பதற்கு திடீ ரென காவல்துறையினர் தடை விதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.  இதனிடையே கந்தூரியையே ஒரு  காரணமாக வைத்தும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும், கந்தூரிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் திருப்பரங்குன்றத்தில் செவ்வாயன்று (பிப். 4) மாலை 3 மணிக்கு போராட்டம் நடத்தப்போவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் அறிவித்து இருந்தார். இதற்காக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, அகில பாரத அனுமன் சேனா உள்ளிட்ட சங்-பரிவார் கூட்டத்தினர், தமிழகம் முழுவதும் சென்று கலவரத்திற்கு ஆட்களைத் திரட்டினர். 
இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்று பல்வேறு பேசியிருந்தார். இந்த நிலையில், திருப்பரங்குன்றத்தில் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் இரு சமூக மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசிய எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் மதுரை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொது அமைதியை சீர்குலைக்க முயலுதல், தவறான தகவல் மூலம் அமைதியின்மையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட  4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.