தேரா சச்சா சௌதா அமைப் பின் தலைவரான குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் அத்துமீறல் மற்றும் கொலை வழக்கில் கைதான ஒரு குற்றவாளி. ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு பரோலில் விடுவிக்கப்பட்டார். 2022 ல் பஞ்சாப் 2023 ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னும் இப்படித்தான் இவர் விடுதலை செய்யப்பட்டார். 15 முறை இப்படி பரோலில் வெளிவந்துள் ளார். பல சந்தர்ப்பங்கள் தேர்தலுடன் ஒத்துப் போகின்றன. அவரின் தண்டனை காலத்தில் இதுவரை 250 நாட்கள் வரை இந்த சலுகையை அனுபவித்துள்ளார்.
30 சட்ட மன்ற தொகுதிகளில் இவருடைய ராஜ்ஜியம்'
ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் 30 சட்டமன்ற தொகுதிகளில் அரசியல் ஆதரவும் செல்வாக்கும் பெற்றவராக இவர் விளங்குவதே இப்படி பரோலில் வருவதற்கு காரணமாக கருதப்படுகிறது. அரசியல் செல்வாக்கு மட்டுமல்ல,அவரின் இரண்டு பெண் சீடர்களை பாலியல் வன்கொலை செய்ததற்காகவும் சிறப்பு மத்திய புல னாய்வு நீதிமன்றத்தால் தண்டிக்கப் பட்டவர் என்ற உண்மையை நினைவில் நிறுத்த வேண்டும்.
நீதி வெல்ல 17 ஆண்டுகள்'
இவரும் இவருடைய சமூக விரோதக் கும்பலும் நிகழ்த்திய வன்முறைச் செயல்களை அம்பலப்படுத்திய ராம் சந்தர் சத்ரபதி என்ற பத்திரிகையாளரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய இவரைப் போன்ற குற்றவாளிக்கு இதுபோன்ற சலுகைகள் கிடைப்பது ஒரு கேலிக்கூத்து. சத்ரபதியின் செய்தித் தாள்( முழு உண்மை) குர்மீத் மீது பாலியல் வன்முறை குற்றம் சுமத்திய ஒருவரின் அனாமதேய கடிதத்தை கைப்பற்றி இருந்தது. 2002 ஆம் ஆண்டு சத்ரபதி அவரது இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். 2019 ஆம் ஆண்டில் தான் இந்த குற்றத்திற்காக குர்மீத் தண்டிக்கப்படுகிறார். சத்ரபதி யின் மகன் அன்சூல் சத்ரபதி நீதியைப் பெற 17 ஆண்டுகள் நீண்ட போராட்ட த்தை நடத்த வேண்டியிருந்தது.
அரசியல் கட்சிகளின் பங்கும் தேர்தல் ஆணையத்தின் மௌனமும்
இத்தகைய நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகளின் பங்கு வெட்கக் கேடானது. பாரதிய ஜனதா கட்சி குர்மீத்துக்கு பரோல் வழங்கியதற்கு கூச்சப்படவே இல்லை. சட்டத்தின்படியே அவருக்கு பரோல் வழங்கப்பட்டது என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டது. தற்போது எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸும் இப்பொழுது இதை கண்டித்தாலும் முன்பு அவர்கள் தலை மையில் ஆட்சி இருந்த போது இதே போலவே நடந்து கொண்டனர் என்பது வேதனையான உண்மை. கொலை பலாத்காரம் போன்ற கொடூரமான குற்றங்களில் தண்டிக்கப்பட்ட ஒருவரின் ஆதரவைப் பெறும் அளவிற்கு அரசியல் கட்சிகள் தாழ்ந்து போகக்கூடாது . இந்திய தேர்தல் ஆணையத்தின் பங்கும் ஆராயத்தக்கது. குர்மீத்தின் பரோல் விண்ணப்பத்தை ரத்து செய்ய ஹரியானா அரசுக்கு உத்தரவிடுமாறு தேர்தல் ஆணையத்தை, அன்சூர் சத்ரபதி வலியுறுத்தினார். சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் பரோல் வழங்குவது ஜனநாயக விழு மியங்களை மீறும் செயல் எனவும் சுட்டிக்காட்டினார். எத்தகைய முறை களில் எல்லாம் குர்மீத்துக்கு பரோல் வழங்கப்பட்டது என்பதைப் பார்க்கும் போது, அதைக் கண்டிக்கும் எண்ணம் துளி கூட தேர்தல் கமிஷனுக்கு இல்லை என்பது வியப்பூட்டுவதாகும்.
குர்மீத் கைது தொடர்பான வழக்கு களில் நீதியை நிலைநாட்டுவதில் நீதி மன்றங்கள் முக்கியப் பங்காற்றி யுள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் அனாமதேய கடிதங்களின் அடிப்படை யில் தானாகவே முன்வந்து பல வழக்குகளை விசாரித்து தண்டனை யும் வழங்கின. அத்தகைய நபருக்கு எந்தவித தயக்கமும் இன்றி உடனடியாக பரோல் வழங்கிடும் கேலிக்கூத்தை தடுப்பதில் நீதிமன்றம் மீண்டும் முனைப்போடு செயல்படும் என நம்புவோம். மூடநம்பிக்கைகளை வளர்க்கும் சக்திகளுக்கு எதிராகப் போராடி உயிரை இழந்த பகுத்தறிவாளரும் என் தந்தையுமான நரேந்திர தபோல்கர் இத்தகைய போராட்டங்கள் பல நூற்றாண்டுகள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். குர்மீத் சிங் செய்த குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டு பல ஆண்டுகள் நிறை வடைந்த நிலையில் கூட அன்சூர் சத்ரபதி போன்றவர்கள் பகுத்தறிவை நிலைநாட்டும் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றார்கள். அது வெற்றியடைய நாமும் அவருடன் கரம் கோர்ப்போம்.
கட்டுரையாளர் : மகாராஷ்டிராவில் மூடநம்பிக்கை எதிர்ப்பு இயக்கமான MANS இன் மாநில செயற்குழு உறுப்பினர்.
தி இந்து 7/10/24
- தமிழில் கடலூர் சுகுமாரன்