tamilnadu

img

வெடி விபத்தில் பலியானோருக்கு அரசு நிவாரணம்

சென்னை,பிப்.25- தூத்துக்குடி வெடிவிபத்தில் உயிரி ழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டி வட்டம், துறையூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலை யில் ஏற்பட்ட வெடி விபத்தில் கொப்பம்பட்டியைச் சேர்ந்த குருசாமி ஈராச்சி மகன் ராமர், பொய்யாமொழி மகன்  தங்கவேல், தொட்டம்பட்டி, பசுவந்த னையைச் சேர்ந்த குட்டையன் மகன் ஜெ.ஜயராஜ், நாலாட்டின்புதூரைச் சேர்ந்த வெள்ளச்சாமியின் மகன் மாடமுத்து என்கிற கண்ணன் ஆகிய நான்கு பேர் உயிரிழந்த துயரச் செய்தி யினைக் கேட்டு மிகுந்த வேதனை யடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த வெடி விபத்தில் உயிரி ழந்தவர்களின் குடும்பத்தி னருக்கு தலா ரூபாய் 3 லட்சம், முதலமைச்சரின் பொது  நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தர விட்டுள்ளேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.