சென்னை,அக்.8- தமிழ்நாட்டில் வனஉரிமைச் சட்டத்தினை முழுமையாக அமல் படுத்த வேண்டும். நூறு ஆண்டுகால பழங்குடி மக்களின் அனுபவ நிலங் களை - ஒதுக்க காடுகளுக்கு ஒப்ப டைப்பதை பரிசீலிக்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்ட வனக் கோட்டத்திற்குட்பட்ட, வனச்சரகர்க ளின் மிக மோசமான நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலி யுறுத்தி தமிழக அரசின் முதன்மைச் செயலாளர்/ சுற்றுச்சூழல் (ம) வனத் துறை செயலாளரிடம் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் சார்பில் மாநில தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.டில்லிபாபு தலைமையில் நேரில் சென்று மனு அளித்து பேசினர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது: தமிழ்நாட்டில் வனஉரிமைச் சட்டம் 2006 அமல்படுத்துவதில், வனத்துறை யினர் முட்டுக்கட்டையாக பல்வேறு மிகமோசமான நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருகின்றனர். இதன் விளை வாக, கள்ளக்குறிச்சி, திருப்பூர், திருப் பத்தூர், தருமபுரி, கன்னியாகுமரி, திரு வண்ணாமலை போன்ற மாவட்டங்க ளில் வருவாய்த்துறையினரின் சில மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அப்பகுதிகளில் உள்ள, வனச்சரகர்கள், சில மாவட்ட வன அலுவலர்களின் கெடுபிடிகளால் பல்லாயிரக்கணக்கான பழங்குடி மக்களுக்கு நில உரிமைச் சான்றும், இதர சமூக உரிமைகளும் கிடைக்கப் பெறாமல் சில ஆண்டுகாலமாக பரி சீலனையே செய்து வருகின்றனர்.
இது குறித்து ஏற்கனவே, திருப் பத்தூர், கள்ளக்குறிச்சி, கன்னியா குமரி போன்ற மாவட்டங்களில் வன உரிமைச் சட்டத்தை அமலாக்குவதில் வனத்துறையினரின் மிக மோசமான நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் மனு அளித்திருந்தோம். தற்போதும் இதே நிலைமை தொடர்கிறது என்பதை மிகுந்த வருத்தத்துடன் மீண்டும் தெரிவிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக திருப் பத்தூர் மாவட்டம் வனக் கோட்டத் திற்குட்பட்ட, சிங்காரப்பேட்டை, திருப்பத்தூர், வனச்சரகர்கள் மீண்டும் மிக மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலங்களிலிருந்து பழங்குடி மக்களை வெளியேற்ற முயற்சி
வனஉரிமைச் சான்று பெற்று தங்களுக்கு அனுபவ நிலங்களில் பழங்குடி மக்கள், நிலச்சீர்திருத்தம் செய்து, உழுது பயிர் செய்து கொள்ள அனுமதி மறுக்கின்றனர். மேலும் நிலங்களிலிருந்து பழங்குடி மக்களை வெளியேற்றிட முயற்சிக்கின்றனர். பல லட்சக்கணக்கான ரூபாய்களை பெற்று, 3 ஆண்டுகாலமாக தொடர்ந்து மிரட்டி பணம் பறித்து வருகின்றனர். இது குறித்து கடந்த 18.8.2022 அன்று திருப்பத்தூர் மாவட்ட வன அலுவல ரிடம் போராட்டத்தின் மூலமாக நடை பெற்ற பேச்சுவார்த்தையில் மாவட்ட வன அதிகாரிகள், பணம் பறித்தது உண்மை என்றும் இது குறித்து விசா ரணை செய்து பணத்தினை, பழங்குடி மக்களிடம் திருப்பித் தரப்படும் என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். ஆனால் இதுவரை பணம் திருப்பித் தரப்படவில்லை. மாறாக, சிங்கா ரப்பேட்டை, வனச்சரகத்தினர், டிஎப்ஓ (DFO), பேச்சுவார்த்தைக்கு பிறகும், பணம் பறிப்பது தொடர்கிறது. மேலும் அவர்களது சொந்த நிலங்களில் உழுது பயிர் செய்திட அனுமதி மறுக்கப்படுகின்றது. இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு தாங்கள் உத்தரவிட்டு, உரிய நபர்கள் மீது தாங்கள் நடவடிக்கை எடுப்பதுடன், பகிரங்க பொது விசாரணை நடத்திட வும், உண்மையில் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு நீதியும், சட்ட உரிமையும் வழங்கிட வேண்டும்.
தொடரும் பணம் பறித்தல்
இதே, திருப்பத்தூர் ஜவ்வாது மலையில், வனநிலம், வனத்துறைக்கு உரிய நிலம் என்று இதுவரை எந்த சர்வேயும் செய்திடவில்லை. ஜவ் வாதுமலையில் புதூர்நாடு, புங்கப் பட்டு நாடு, நெல்லிவாசல்நாடு, இந்த மூன்று நாடுகளிலும் நிலப்பரப்பு சர்வே செய்யப்படவில்லை. வனத் துறையினரின் நிலம் எது? எது? என்று வனத்துறையினருக்கே தெரியாத நிலையில் பழங்குடி மக்களின் 100 ஆண்டுகால அனுபவ நிலங்களில் உழுது பயிர் செய்திடாமல் தடுப்ப தும், டிராக்டர் வைத்து உழுதால், ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் பணம் பறிப்பதும் நடப்பதை தடுத்து நிறுத்திட தாங்கள் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதேப் போல் தான் திருப்பூர் மாவட்டம், திருமூர்த்திமலையில் வாழும் பழங்குடி மக்களது அனுபவ நிலங்க ளுக்கு சர்வே செய்து நிலஉரிமை சான்று அளிப்பது பல வருடங்களாக நிலுவையில் உள்ளன.
ஒதுக்கக்காடு ஆக்கும் பிரச்சனை
இரண்டாவதாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பூர்வீகமாக, நூறு ஆண்டுகாலமாக உழுது பயிர் ஜீவனம் செய்து வாழ்ந்து வரும் பழங் குடி மக்களது பூர்வீக நிலங்களி லிருந்து, அம்மக்களை வெளியேற்றிட வும், அந்நிலங்களை ஒதுக்க காடுக ளுக்கு ஒப்படைத்திட அரசும், வனத் துறையும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. இதே கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை, பெரிய கல்வராயன் மலை பகுதிகளில் அனு பவ நிலங்களுக்கு நிலப்பட்டா வழங்கப்படாமல் ஒதுக்க காடு என்ப தற்கு நிலம் ஒப்படை செய்வதை அனுமதிக்க முடியாது. மொத்தமாக 13 ஆயிரம் ஏக்க ருக்கு மேற்பட்ட நிலங்களில் 20 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மேற்படி நிலங்களில் உழுது பயிர் ஜீவனம் செய்து நூறு ஆண்டுகால மாக வாழ்ந்து வருபவர்களுக்கு வன உரிமைச் சட்டத்தின் கீழ் நிலஉரிமை வழங்கிட உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.