tamilnadu

img

அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைச் சரிசெய்க!

புதுதில்லி, ஜூலை 25- ஜூலை 26 முதல் 29 வரை தில்லியின் ஜந்தர்மந்தர் அருகே நாடாளுமன்ற வீதியில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்தவுள்ள அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறை வேற்றி, நாட்டிலுள்ள ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகளின் குறைபாடு களைச் சரி செய்திட வேண்டும், நாடு முழுவதும் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களின் பணிகளை வரன்முறை செய்து, குறைந்தபட்ச ஊதியம் அளித்திடுமாறும், அவர்களைக் கார்ப்ப ரேட்டுகளின் கீழ் வேலை செய்யக்கூடிய விதத்தில் மாற்றும் யோசனைகளைக் கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் பி.ஆர்.நடராஜன், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவைத் தெரிவித்தும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை வலி யுறுத்தக் கோரியும் பி.ஆர்.நடராஜன் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடி தத்தில்  குறிப்பிட்டிருப்பதாவது:

‘‘1975 முதல் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை(ICDS)யின் கீழ் நாட்டில் அங்கன்வாடி ஊழி யர்களும், உதவியாளர்களும் குழந்தை களிடையே பரவலான ஊட்டச்சத்து குறைபாடு என்ற மிகப் பெரிய சவாலை எதிர்கொண்டு போராடும் வகை யில் சேவை புரிந்து வருகிறார்கள். நாடு  75-ஆவது சுதந்திர தின விழாவை ‘‘அம்ரித் மகோத்சவ்’’ என்ற பெயரில் கொண்டாடப் போகும் சமயத்தில்,  சமு தாயத்தில் விளிம்புநிலை பிரிவி லிருந்து வரும் பெண்களான கிட்டத் தட்ட 27 லட்சம் அங்கன்வாடி ஊழியர் களும், உதவியாளர்களும் மற்றும் பய னாளிகளான 6 வயதுக்கும் கீழ் உள்ள  8 கோடி குழந்தைகள் மற்றும் 2 கோடி கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய் மார்கள் ஆகிய எவருமே இந்த  சுதந்திர தின நிகழ்வைக் கொண்டாடும்  நிகழ்வாக கொள்ள இயலாமல் துர திர்ஷ்ட வசமாக இந்திய அரசமைப்புச் சட்டத்தால் உத்தரவாதப்படுத்தப்பட்ட அவர்களது உரிமைகளை கேட்டு குரல் உயர்த்த வேண்டிய நிகழ்வாகவே அமைந்துள்ளது.

திட்டத்தை கலைக்க முடிவு?

இந்த ஒருங்கிணைந்த குழந்தை கள் மேம்பாட்டு சேவைத் திட்டம் நீண்ட காலமாகவே நிதிப் பற்றாக்குறையை அனுபவித்து வருகிறது. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இந்திய அர சமைப்புச் சட்டத்தால் உத்தரவாதப் படுத்தப்பட்ட அங்கன்வாடி ஊழி யர்கள், உதவியாளர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் அடிப்படை உரிமைகளைக் குறைத்தல் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைத் திட்டத்தையே கலைத்தல் என்னும் மோசமான முடிவை நோக்கி ஒன்றிய அரசு நட வடிக்கைகள் எடுத்து வருகிறது. தொட ர்ந்து இத்திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை குறைத்தல், பயன்களை பெறுவதற்கு ஆதார் இணைப்பை சட்ட விரோதமாக கட்டாயமாக்கி, பயனாளி களைக் குறி வைத்தல், மக்களிட மிருந்தே ஊட்டச்சத்துக்களை  வசூலிக்க சொல்லி ஊழியர்களைக் கட்டா யப்படுத்துதல் ஆகியவற்றையும் அரசு செய்து வருகிறது. மேலும் கார்ப்பரேட்டுகள் மற்றும் அரசுசாரா நிறுவனங்கள் போன்றவற்றிடம் இத்திட்டத்தை மாற்றுவதற்கும் அரசு திட்டம் தீட்டி வருகிறது.

புதிய கல்விக் கொள்கை, ஆரம்பகால குழந் தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வித் திட்டத் தின் அடிப்படை நோக்கத்தையே சீர்குலைக் கும் விதத்திலும், முன்பள்ளி செயல்பாடுகளை தனியார்மயப்படுத்துதலை நோக்கித் தள்ளி விடும் வகையிலும், அங்கன்வாடிகளை மூடி விடும் விதமாகவும் செயல்படுத்தப்படுகிறது. கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்த்த போ ராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்களும் உதவி யாளர்களும் தங்களது தன்னலமற்ற சேவையை நாட்டிற்காக அளித்துள்ளார்கள். பல ஊழியர்கள் மதிப்பு மிக்க உயிரையும் இழந்துள்ளனர். ஆனால் இந்திய அரசு இதுவரை ஆபத்திற்கான எந்தவித படிகளையோ அல்லது உயிரை இழந்தவர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகையை யோ அவர்களுக்கு அளிக்கவில்லை. வேலைப் பளு பன்மடங்கு அதிகரித்துள்ளது. விலைகள் வானளாவ உயர்ந்த போதிலும் கடந்த நான்கு வருடங்களாக ஊதிய அளவு அதிகரிக்கப் பட வில்லை. ஒரே விதமான பணிகளைச் செய்த போதிலும் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியா ளர்களுக்கு கிடைக்கும் ஊதியம் மற்றும் சமூக  பாதுகாப்பு விஷயங்களில் நீண்ட இடைவெளி உள்ளது. பல மாநிலங்களில் மாதத்திற்கு ரூ.5100 முதல் ரூ.18000 வரையிலும்கூட ஊதியம் மாறு படுகிறது. 

சட்ட விரோத பணி நீக்கம்

தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியா ளர்கள் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப் பட்டு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது ஹரியானாவில் 975 ஊழியர்களும், உதவியா ளர்களும், தில்லியில் 991 பேரும் வேலை  நிறுத்தத்தில் பங்கெடுத்ததற்காக சட்டவிரோத மாக பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்திய அரசு  தொழிற்சங்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறும் போராட்டங்களை ஒடுக்கு மாறும் மாநில அரசுகளுக்கு 2022 மார்ச் 29 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றம் 2022 ஏப்ரல் 25 அன்று ஒரு தீர்ப்பை அளித்துள்ளது. அதில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள், அரசு ஊழியர்களாகக் கருதப்பட வேண்டும் என்றும், அவர்கள் பணிக்கொடை (கிராஜூவிட்டி) சட் டத்தின் கீழ் பணிக்கொடை பெற உரிமை உள்ள வர்கள் என்றும் “கௌரவ ஊதியம்” என்ற பெய ரில் அவர்கள் பெறும் ஊதியம் சம்பளமாக கரு தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அங்கன்வாடி ஊழியர்களுக்கும் உதவியா ளர்களுக்கும் சிறந்த சேவை நிலைமைகளை அளிப்பதற்கு வழிமுறைகளை கண்டறியும்படி அரசாங்கங்களை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி யுள்ளது. இந்த சூழ்நிலையில், அகில இந்திய அங் கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் கள் கூட்டமைப்பின் (AIFAWH) கீழுள்ள அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சார்பில் சில கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. 

சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள்

45 மற்றும் 46ஆவது இந்திய தொழிலாளர் மாநாடுகளின் பரிந்துரைகளை செயல்படுத்தி பணிக்கொடை (கிராஜூவிட்டி) மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை அமல்படுத்தவும், ஊழியர்களுக்கான சிறந்த வேலை நிலைமை களை உருவாக்கவும் துரிதமான நடவடிக்கை களை ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் எடுக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் அளிப்பது, நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணு டன் குறைந்தபட்ச ஊதியத்தை இணைப்பது, ஓய்வூதியம் மற்றும் ஊழியர் வைப்புநிதி, பிராவிடண்ட் ஃபண்ட், கிராஜூவிட்டி உள்ளிட்ட சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செயல் படுத்த வேண்டும். வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்ததால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்ட ஹரியானாவைச் சேர்ந்த 975 ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும், தில்லியைச் சேர்ந்த 991 பேருக்கும் உடனடியாக மீண்டும் வேலை அளித்திட வேண்டும். அவர்களுக்கு எதிரான பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். தில்லியில் விதிக்கப்பட்ட எஸ்மா (ESMA) சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். தொழிற்சங்க செயல் பாடுகளை கட்டுப்படுத்துவதற்காகவும் போராட் டங்களை ஒடுக்குவதற்காகவும் 2022 மார்ச் 29 அன்று மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுதல் வேண்டும்.

ஒதுக்கீட்டை குறைக்காதே

சிறந்த தரமுள்ள மொபைல் போன்கள் அளிக்கப்பட்டு கட்டம் கட்டமான முறையில் அவைகளை ‘‘டேப்லெட்’’ மூலம் பதிலீடு செய்ய வேண்டும். “டேட்டா பேக்கேஜ்” மற்றும் நெட் வொர்க் கிடைத்தலை உறுதிப்படுத்த வேண்டும். ‘‘போஷான் ட்ரேக்கர்’’ (Poshan Tracker) அமல் படுத்தும் முன்பாக மாநில மொழிகளில் உரு வாக்கப்பட வேண்டும். இது அங்கன்வாடி பணி யாளர்களின் வேலைப்பளு குறைக்கப்படுவதை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். போஷான் ட்ரேக்கர் பெயரில், பழிவாங்கல் அல்லது தொல்லையளித்தல் அல்லது கூலி நிறுத்தம் அல்லது பயனாளிகளுக்கான பயன் கள் நிறுத்தம் ஆகியவை கூடாது. பயனாளி களின் ஆதார் எண் அல்லது போன் எண் இணை ப்பு என்பது கட்டாயமாக்கப்படக் கூடாது. உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக, ஆதார் எண் இல்லாத பயனாளிகளுக்கான ஊட்டச்சத்து ஒதுக் கீட்டை குறைக்கும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும்.

ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வித்  திட்டத்தின் தரத்தை உறுதிப் படுத்துவ தற்காகவும், ஊழியர் மற்றும் உதவியாளர்களு க்கு கூலி மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப் படுத்தவும் ஒருங்கிணைக்கப்பட்ட குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்திற்கான போதுமான பட் ஜெட் ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்களுக்கு உத்தரவாதப்படுத்தப்பட்ட குறைந்தபட்ச கூலி, ஓய்வூதியம் மற்றும் கரு ணைத் தொகை (ex-gratia) ஆகியவற்றுடன் ஒரே மாதிரியான பணி நிலைமைகளை நாடு முழுவதிலும் இந்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

தனியார்மயமாக்கக் கூடாது

புதிய கல்வி கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும். ஆறு வயதுக்கு கீழுள்ள குழந்தை களுக்கு ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்விக்கான உரிமையை உறுதிப் படுத்த சட்டங்கள் இயற்ற வேண்டும். இதற்கு அங்கன்வாடிகளை நோடல் ஏஜன்சிகளாக (Nodal Agency) ஆக்க வேண்டும். அங்கன் வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்க ளுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் அரசு ஊழியர்களாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். தொழிலாளர் சட்டங்களின் கீழ் திட்ட ஊழி யர்கள் கொண்டுவரப்பட வேண்டும். ஊழியர் விரோதத் தொழிலாளர் குறியீடுகளைத் திரும்பப் பெற வேண்டும்.

எந்த வகையிலும் ஐசிடிஎஸ் திட்டம் தனி யார்மயம் ஆக்கப்படக் கூடாது. கார்ப்பரேட்டு களோ அல்லது அரசு சாரா நிறுவனங்களோ அங்கன்வாடிகளில் ஈடுபடக் கூடாது.  அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவி யாளர்கள் ஜூலை 11 அன்று கோரிக்கை தினமாக கடைப்பிடித்து நாடு முழுவதிலும் ஆர்ப்பாட் டங்களை நடத்தியுள்ளனர். தற்போது தங்க ளது நியாயமான கோரிக்கைகள் அரசாங் கத்தால் நிறைவேற்றப் படாததால் ‘‘அங்கன் வாடி அதிகார் மகாபதாவ்’’ (ANGANWADI ADHIKAR MAHAPADAV) என்ற பெயரில் தங்க ளது கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 26 முதல் 29 வரை முற்றுகைப் போராட்டத்தை நடத்த வுள்ளனர். இதில் நாடு முழுவதுமிருந்து ஊழி யர்களும் உதவியாளர்களும் கலந்து கொள் கின்றனர்.

இவ்வாறு போராடிவரும் அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி டுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பி.ஆர்.நடராஜன் கோரியுள்ளார்.