tamilnadu

img

மயிலாடுதுறை முன்னாள் மாவட்ட ஆட்சியரை கண்டித்து சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை முன்னாள் மாவட்ட ஆட்சியரை 
கண்டித்து சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சனியன்று நடை பெற்றது.  சீர்காழி அருகே கடந்த சில நாட்களு க்கு முன்பு 3 வயது குழந்தை ஒன்று, அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுமிக்க ஒருவனால் பாலியல் வன்கொடுமை தாக்குதலுக்கு ஆளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில், புதுச்சேரி ஜிப்ம ரில் சிகிச்சைப் பெற்று வருகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக வெள்ளியன்று மாலை வரை பொறுப்பு வகித்த ஏ.பி மகாபாரதி, நிகழ்ச்சி ஒன்றில் உரை யாற்றும் போது பாதிக்கப்பட்ட 3 வயது குழந்தை மீது அவதூறு பரப்பும் வித மாக அந்த குழந்தை  மீதும் தவறு உள்ளது என்றும், அந்த குழந்தை குற்ற வாளி மீது காரி துப்பியது தான் பாலியல் வன்முறை தாக்குதலுக்கு காரணம் என தனது, பொறுப்பை மறந்து குற்றவாளிக்கு ஆதரவாக  பேசி யுள்ளார்.  ஆட்சியரின் இந்த கருத்து ஊட கங்களில் வெளியாகி சர்ச்சையானது. உடனடியாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்து மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தது. இதே போன்று பல் வேறு அரசியல் கட்சிகள் கண்டனத்தை பதிவு செய்தன. இதையடுத்து மாவட்ட  ஆட்சியர் ஏ.பி.மகாபாரதியை மாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைத்தது தமிழ்நாடு அரசு.  இந்நிலையில், போக்சோ குற்றவா ளிக்கு ஆதரவாகப் பேசிய  மயிலாடு துறை முன்னாள் ஆட்சியரைக் கண்டித் தும், அவர் மீது வழக்கு பதிவு செய்து நட வடிக்கை எடுக்கக்கோரியும், மயிலாடு துறை கிட்டப்பா அங்காடி முன்பு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தி ற்கு  கட்சியின் மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன் தலைமை வகித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி, மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.கணேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட செயற்குழு, ஒன்றியச் செயலாளர்கள், மாவட்ட, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.