tamilnadu

img

கிராமப்புற மருத்துவர்கள், பணியாளர்களுக்கு போக்குவரத்து வசதி செய்துதரப்பட்டுள்ளதா? தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை:
ராமங்கள், ஊரகப் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவர்கள், பணியாளர்கள் சென்று வர போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையைச்  சேர்ந்த முகமது யுனீஸ் ராஜா என்பவர்,”  அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், நோயாளிகள் மிகுந்தசிரமத்திற்கு ஆளாவர்.  

ஆகவே, மருத்துவர்கள் எந்த விதத்திலும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும்” என மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு வெள்ளியன்று   நீதிபதிகள்கிருபாகரன்,புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு திருப்தி அளிக்கவில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்,இதையடுத்து நீதிபதிகள்,”  ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன?கிராமங்கள். ஊரகப் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவர்கள், பணியாளர்கள் சென்று வர போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா? .மருத்துவர்களின் ஆரம்பக்கால ஊதியம் எவ்வளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது?அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியம் எவ்வளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது? இது குறித்து விரிவான பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழகஅரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.