வேலூரில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அனைத்து ஓய்வூதியர் நல அமைப்பு முதல் மாநில மாநாடு
வேலூர், ஜூன் 7 - தமிழ்நாடு பேரூ ராட்சி, நகராட்சி, மாநக ராட்சி அனைத்து ஓய்வூ தியர் நல அமைப்பின் முதல் மாநில மாநாடு ஆகஸ்ட் 10 அன்று வேலூரில் நடைபெற உள்ளது. இதற்கான வரவேற்புக் குழு அமைப்பு கூட்டம் வேலூர் பெல்லியப்பா அரங்கில் மாநில ஒருங்கி ணைப்பாளர் பா.ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாநாட்டு வரவேற்புக் குழு தலைவராக எம்.பன்னீர் செல்வம், செயலாளராக வீ.செல்வராஜ், பொருளாள ராக எஸ்.கனகராஜ், இணை பொருளாளராக ஏ.தேவ குமார் மற்றும் 25 துணைத் தலைவர்கள், 20 இணைச் செயலாளர்கள், 15 செயற்குழு உறுப்பினர்கள், 11 சிறப்பு ஆலோசகர்கள் உள்ளிட்ட 75 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப் பட்டது.