tamilnadu

img

உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களை உறுதி செய்க! - தி.நாகராஜன்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 73, 74-வது சட்டத்திருத்தங்களின்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு உறுதி  செய்யப்பட்ட அதிகாரங்கள் சீர்குலைக்கப் பட்டுள்ளன. அந்தத் திருத்தங்களின்படி உள்ளாட்சி அமைப்புகளின் தன்னாட்சியை உறுதி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் கட்சியின் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கு எழுப்பப்பட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றுவதே, உள்ளாட்சிகளை உயிர்ப்புடன் செயல்படுத்த உதவும்.

அதிகாரம் வழங்குக

    கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு 29 வகையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.
    நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு 18 வகையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.
    கிராம ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் வரை பணிகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் வேண்டும்.

நிதி ஒதுக்கீடு

    மத்திய மற்றும் மாநில நிதி ஆணைய நிதி நேரடியாக உள்ளாட்சிகளுக்கு விடுவிக்கப்பட வேண்டும்.
 உள்ளாட்சிகளுக்கு மாநில அரசின் நிதி 10% இலிருந்து 30% ஆக உயர்த்தப்பட வேண்டும்.

ஜிஎஸ்டி வரி

    தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வரி உத்தரப்பிர தேசத்தை விட இரு மடங்கு அதிகம்.
 ஆனால் தமிழ்நாட்டுக்கு திரும்பும் ஜிஎஸ்டி பங்கு 1 ரூபாய்க்கு 26 பைசா மட்டுமே.
 உள்ளாட்சி பணிகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பது பெரும் சுமை.
 உள்ளாட்சி பணிகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும்.கிராம சபை மற்றும் வார்டு சபை
 கிராம சபை, வார்டு சபை கூட்டங்களை மக்களின் பங்களிப்புடன் தொடர்ந்து நடத்த வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்

    தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வரி உத்தரப்பிர தேசத்தை விட இரு மடங்கு அதிகம்.
 ஆனால் தமிழ்நாட்டுக்கு திரும்பும் ஜிஎஸ்டி பங்கு 1 ரூபாய்க்கு 26 பைசா மட்டுமே.
 உள்ளாட்சி பணிகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பது பெரும் சுமை.
 உள்ளாட்சி பணிகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும்.கிராம சபை மற்றும் வார்டு சபை
 கிராம சபை, வார்டு சபை கூட்டங்களை மக்களின் பங்களிப்புடன் தொடர்ந்து நடத்த வேண்டும்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்

 வேலை உத்தரவு வழங்கும் அதிகாரம் ஊராட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
 நகர்ப்புறங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப் பட வேண்டும்.

பெண்கள் மற்றும்  பட்டியல் இன பிரதிநிதித்துவம்

உள்ளாட்சிகளில் 50% இட ஒதுக்கீடு இருந்தாலும் பெண் பிரதிநிதிகளின் செயல்பாடு பெரும்பாலும் அவர்களது குடும்பத்து அல்லதுகட்சியின் ஆண்களால் முடக்கப்படுகிறது. 
   பட்டியல் இன பிரதிநிதிகள் ஆதிக்க சக்திகளால் ஆக்கிரமிக்கப்படுகின்றனர்.

வெளிப்படைத் தன்மை

 உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தர ஆசிரியர்களால் நிரப்பப்படவேண்டும்.
 வகுப்பறைகள், விளையாட்டு திடல், குடிநீர், கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
 கற்பித்தல் திறன் உயர்த்தப்பட வேண்டும்.
 வருகை குறைந்தது என்று பள்ளிகளை மூடக்கூடாது.

சுகாதாரம்

 பாதாள சாக்கடை பணிகளில் நிரந்தர ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
 நவீன இயந்திரங்கள் வாங்கி பயன்படுத்தப்பட வேண்டும்.
 மக்கள் தொகைக்கேற்ப பாதாள சாக்கடை அமைப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
 லிப்ட்வெல் மற்றும் பம்பிங் ஸ்டேசன்கள் 24 மணி நேரமும் இயங்க வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் (UPHC)

    நிரந்தர டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
 உள் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்.
 ஸ்கேன், எக்ஸ்ரே, லேப் வசதிகள் அதி கரிக்கப்பட வேண்டும்.
 நகர்ப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலை யங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.
 

குப்பை மேலாண்மை

     2014 ஆம் ஆண்டு சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்.
 அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.
 விற்பனைக்குழு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
 இடம் மாற்றும்போது 30 நாள் முன் அறிவிப்பு மற்றும் மாற்று இடம் வழங்கப்பட வேண்டும்.
 

நகர்மயமாதல்

    புலம்பெயர் தொழிலாளர்கள் கணக்கெடுக்கப் பட வேண்டும்
 குறைந்தபட்ச கூலிச்சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்
 

தனியார் மயம் கூடாது

 உள்ளாட்சி வருமானம் தரும் திட்டங்களை தனியாரிடம் ஒப்படைப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
 பேரிடர் காலங்களில் தனியார் நிறுவனங்கள் பொறுப்பேற்காமல் ஓடிவிடும் அபாயம் உள்ளது.

காண்ட்ராக்ட் முறை

 உள்ளாட்சி பணிகளில் காண்ட்ராக்ட் முறை நிறுத்தப்பட வேண்டும்.
 துப்புரவு மற்றும் பாதாள சாக்கடை பணியாளர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்பட வேண்டும்.
 தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.   தமிழகம் முழுவதும் நகர்ப்புற, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இத்தகைய பிரச்சனைகள் மண்டிக் கிடக்கின்றன. இவற்றை சரிசெய்ய, தமிழ்நாடு அரசு அரசியல் ட்டப்படி உள்ளாட்சிகளின் தன்னாட்சி அதிகாரத்தை அங்கீகரித்து, செயல்படுத்திட வேண்டும்.