பாமகவில் தந்தை - மகன் மோதல் பாஜக - அதிமுக ‘சமரச’ முயற்சி
சென்னை, ஜூன் 5 - பட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நீண்டகாலமாக நிலவி வந்த உள் கட்சிப் பிரச்சனைகள் இப்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளன. கடந்த டிசம்பர் மாதம் நடந்த சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டத்தில், தனது மகள்வழிப் பேரன் முகுந்தனை இளைஞரணித் தலைவராக, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தபோது, கட்சித் தலைவரான அன்புமணி மேடையிலேயே வெளிப்படையாக அதனை ஏற்க மறுத்தார். தந்தை - மகனுக்கு இடையிலான மோதல் முதல்முறையாக வெளிச்சத் திற்கு வந்தது. ஆனால், அந்த மாதத்தி லேயே இருவரும் சந்தித்து சமரசமாகி விட்டார்கள் என கூறப்பட்டது. ஆனால் அது நிரந்தரமாகவில்லை. கடந்த ஏப்ரல் 11 அன்று, அன்பு மணியை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித் தார். தலைவர் பதவியையும் தானே வகிக்கப் போவதாக அறிவித்தார். பகிரங்க மோதலின் தீவிரம் அதைத்தொடர்ந்து, மே 10 அன்று நடந்த சித்திரை முழு நிலவு மாநாட்டின் ஏற்பாடுகளை முழுவதுமாக அன்பு மணி செய்தபோதும், மேடையில் தந்தை -மகன் ஆகிய இருவரும் நேருக்கு நேர், முகம் கூட பார்த்துக் கொள்ளவில்லை. மாறாக அன்பு மணியை சாடையாக ராமதாஸ் விமர்சித் தார். இந்த சம்பவம் கட்சிக்குள் நிலவும் பிளவின் ஆழத்தை உணர்த்தியது. அத்துடன் இல்லாமல், மே 29 அன்று செய்தியாளர் சந்திப்பை நடத்திய ராமதாஸ், “வளர்த்த கிடா மார்பில் எட்டி உதைத்தது” என்று அன்புமணியை கடுமையாக சாடினார். அன்புமணியை எம்.பி., அமைச்சர் பதவியில் அமர்த்தியிருக்கக் கூடாது” என்றார். பாஜக கூட்டணியில் சேரா விட்டால் செத்துப் போவேன் என்று தற்கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டார். இதனிடையே, தாய்மாமன் அன்பு மணி - தாத்தா ராமதாஸ் மோதலுக்கு இடையே, யார் பகையும் வேண்டாம் என்று முடிவெடுத்த பேரன் முகுந்தன் தனது இளைஞரணித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், பாமக நிர்வாகிகள் நிய மனத்தில் யாருக்கு அதிகாரம் என்ப தில் ராமதாஸ் - அன்புமணி இடையே போட்டா போட்டி ஏற்பட்டு, இருவரும் மாற்றி மாற்றி தங்கள் ஆதரவாளர் களை நிர்வாகிகளாக நியமித்து வந்தனர். தந்தை மகனுக்கு இடையிலான இந்த மோதல், பாஜக - அதிமுக கூட்டணியிலும் சிக்கலை ஏற்படுத்தி வந்தது. இதையடுத்து, ராமதாஸ் - அன்பு மணி இடையே சமரசம் ஏற்படுத்த பாஜக-வும் அதிமுகவும் தற்போது களத்தில் குதித்துள்ளன. துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மற்றும் அதிமுக முன்னாள் நிர்வாகி சைதை துரைசாமி ஆகியோர் ராம தாஸை சந்தித்து சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். அதற்காக, வியாழக்கிழமை (ஜூன் 5) காலை 10 மணிக்கு தைலா புரம் தோட்டத்தில் சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் வெளியில் வர வில்லை. சுமார் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக பேச்சுவார்த்தை நடத்தினர். அன்புமணியும் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றார். அவர், தந்தை ராமதாஸூடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்ட நிலையில், 45 நிமிட பேச்சுவார்த்தைக்கு பின்னர் வெளியே கிளம்பிச் சென்றார்.அப் போது, செய்தியாளர்களின் கேள்வி களுக்கு பதில் எதுவும் பேசாமல், கார் கண்ணாடியை திறக்காமல் கை யெடுத்து கும்பிட்டபடியே அன்புமணி கிளம்பிச் சென்றார். அதேபோல 3 மணி நேர சந்திப்பு முடிந்து வெளியே வந்த ஆடிட்டர் குரு மூர்த்தி, “அன்புமணி தைலாபுரம் தோட்டத்திற்கு வந்ததே எனக்குத் தெரியாது. பாஜகவிற்காக நான் இங்கு வரவில்லை. ராமதாஸ் என்னுடைய நீண்ட நாள் நண்பர். அவரைச் சந்தித்துப் பேசவே, இங்கு நான் வந்தேன். பிரச்சனை இருக்கும் இடத்திற்கு நான் செல்லவில்லை. நான் இருக்கும் இடத் திற்குத் தான் பிரச்சனை தேடி வரு கிறது” என்று கூறினார். இந்த சந்திப்பு திட்டமிட்டது என்றா லும், குருமூர்த்தி கூறியதை யாரும் நம்பவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், இந்த சந்திப்பின் முடிவு கள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் தற்போதைய சூழலில் பாமகவின் எதிர்காலம் குறித்த கேள்விக்குறிகள் அதிகரித்து உள்ளன. ஒரு காலத்தில் சமூக நீதிக்காக போராடிய கட்சி, இன்று குடும்ப அரசிய லின் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது.