tamilnadu

img

மீண்டும் கலப்பைகளின் போர் முழக்கம்

புதுதில்லி, மார்ச் 21- விவசாயிகள் விரோத முகமாக மாறியுள்ள மோடி அரசுக்கு எதிரான இரண்டாவது மாபெரும் போராட்டத் திற்கு விவசாயிகள் மகா பஞ்சாயத்து அழைப்பு விடுத்துள்ளது. தில்லி ராம்லீலா மைதானத்தில் சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைமை யில் திங்களன்று திரண்டிருந்த பல்லா யிரக்கணக்கானோர், போராட்டம் தொட ரும் என்று அறிவித்தனர். சுமார் 500 அமைப்புகளின் தலைவர்கள் தேசியத் தலைநகரில் கூடி இந்த பிரகடனத்தை வெளியிட்டனர். இரண்டாவது கட்ட போராட்ட அறி விப்பை ஏற்று நாடு முழுவதும் விவ சாயிகள் களமிறங்குவார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் மாநாடுகளும் பேரணி களும் ஏற்பாடு செய்யப்படும். ஏப்ரல் 30 அன்று, கிசான் மோர்ச்சா பொதுக்குழு, எதிர்காலப் போராட்டத்தை முடிவு செய்யும். ஒன்றிய அரசின் கார்ப்பரேட் நிறுவனங்களை திருப்திப்படுத்தும் கொள்கைகள் விவசாயிகளை நிலை குலைய வைத்துள்ளன. ஆனால், தற்கொலை அல்ல, தொடர் போராட் டமே தீர்வு என மகா பஞ்சாயத்து அறிவித்தது. 

விவசாயிகளின் தலைவர்கள் ராகேஷ் திகாயத், விஜு கிருஷ்ணன், தர்ஷன் பால், அவிக் சாஹா, ருல்து சிங்  மான்சா, தஜிந்தர் சிங் விர்க், ஜோகிந்தர் சிங் உட்பட சுமார் 50 தலைவர்கள் உரையாற்றினர். மகாபஞ்சாயத்தை யொட்டி ராம்லீலா மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 5,000 பாதுகாப்புப் படையினரை ஒன்றிய அரசு நிறுத்தியது.

விவசாயிகளின் கோரிக்கைகள்

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப் பாதுகாப்பு, ஆதரவு விலை நிர்ண யம் செய்ய ஒன்றிய அரசு ஒரு தலை பட்சமாக அமைத்த குழுவை கலைத்து, விவசாயிகளின் தலைவர்களைக் கொண்ட புதிய குழுவை அமைத்தல், விவசாயக் கடன் தள்ளுபடி, விவ சாயிகளுக்கு எதிரான மின்சார மசோதா வை திரும்பப் பெறுதல், லக்கிம்பூர் கேரி  விவசாயிகளை கும்பல் படுகொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும். லக்கிம்பூர்கேரி விவசாயிகள் படுகொலைக்கு மூளையாக செயல்பட்ட உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றி கைது செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை முழக்கம் எழுப்பியுள்ளனர்.

விவாதத்திற்கு தயார் :  ஒன்றிய அரசு சொல்கிறது

இதனிடையே அகில இந்திய விவசாயிகள் சங்க துணைத் தலைவர் ஹன்னன் முல்லா தலைமையிலான கிசான் மோர்ச்சா குழுவினர், ஒன்றிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்து மனு அளித்தனர். விவாதத்துக்குரிய மின் கட்டணத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய் வதற்கு முன் ஆலோசனை நடத்தப் படும் என்ற வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.  இச்சந்திப்பின்போது, விவசாயி களுக்கான மின்சார மானியம் தொடரும்  என்பதுதான் அமைச்சரின் ஒரே பதில். முதல் விவசாயிகள் போராட்டத்தை சமரசம் செய்த ஒன்றிய அரசு, அளித்த வாக்குறுதிகளை உரிய நேரத்தில் நிறைவேற்றாவிட்டால் நாடு கடும் போராட்டங்களை சந்திக்கும் என அமைச்சரைச் சந்தித்த 15 பேர் கொண்ட குழு எச்சரித்தது. பின்னர், ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை தலைவர்கள் மகா பஞ்சாயத்து மேடைக்கு வந்து தெரி வித்தனர். காலிஸ்தான் ஆதரவு அம்ரித்பால் சிங்கை கைது செய்வதற்காக தடை  உத்தரவு விதிக்கப்பட்டதால், பஞ்சா ப்பை சேர்ந்த விவசாயிகள் மகா பஞ்சா யத்தில் பங்கேற்க முடியவில்லை. விவசாயிகளின் பேருந்துகளை பஞ்சாப் போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

விஜு கிருஷ்ணன் முழக்கம்

இந்த விவசாயிகள் மகாபஞ்சா யத்தில் உரையாற்றுகையில், ஒன்றிய அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகள் மற்றும் கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக தொடங்கும் இரண்டாவது விவசாயிகள் போராட்டம், நாடு முழுவதும் பரவும் என அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செய லாளர் விஜு கிருஷ்ணன் தெரிவித்தார்.  விவசாயிகள் சங்கத்தின் தலைமை யில் மகாராஷ்டிர விவசாயிகள் வெற்றி கரமாக நடத்திய நீண்ட நடைபயணத்தை அவர் சுட்டிக்காட்டிய போது, பெரும் கரவொலி எழுந்தது. எங்கெல்லாம் விவ சாயிகள் ஒருங்கிணைந்து நிற்கிறார் களோ, அங்கெல்லாம் அரசு அடி பணிந்துள்ளது. வரும் நாட்களில் மாற்றுக் கொள்கைகளுக்கான வலுவான போராட்டத்தை நாடு காணும் என்றும் விஜு கிருஷ்ணன் அறிவித்தார்.