tamilnadu

img

மதுரை இராஜாஜி மருத்துவமனையில் கட்டண வார்டுகள் கூடாது

மதுரை, மார்ச் 10- மதுரை அரசு இராஜாஜி மருத்து வமனையில் தொடங்கப்பட்டுள்ள கட்டண வார்டு  முறையை கைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது.  இது குறித்து கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன் வெளியிட்டுள்ள  அறிக்கை வருமாறு:- தென் தமிழகத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் இலவசமாக சிகிச்சை பெற்றுவரும் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை இரண்டு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சை வழங்கி வருகிறது. ஆங்கிலேய அரசால் 1842-ஆம் ஆண்டு எர்ஸ்கின் மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது; 1872-ஆம் ஆண்டு மதுரை நக ராட்சியால் பராமரிக்கப்பட்டது. 1918- ஆம் ஆண்டு மாநில நிர்வாக பராமரிப்பு க்கு மருத்துவமனை வந்தது. 1954-ஆம்  ஆண்டு முதல் பொது மருத்துவமனை யாக செயல்படுகிறது.  சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் இம்மருத்துவமனை அமைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 9 ஆயிரத்துக்கும்  மேற் பட்ட வெளிநோயாளிகளும், 3 ஆயிரம்  உள் நோயாளிகளும் இம்மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அனைத்து வார்டுகளிலும் 24 மணி நேர மும் செயல்படக்கூடிய அளவில் மருத்து வர்கள், செவிலியர்கள் மற்றும் கடை நிலை ஊழியர்களை கொண்டு செயல் பட்டு வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த முன்னாள் மக்களவை உறுப்பி னர் பொ.மோகன், மறைந்த  சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர் என்.நன்மா றன் ஆகியோர் அரசு இராஜாஜி மருத்துவ மனையின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளனர். தற்போதைய மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசனும் மருத்துவமனையின் வளர்ச்சி க்கு பங்களிப்பைச் செலுத்தி வருகிறார்.  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனநாயக அமைப்புகள் இராஜாஜி மருத்துவமனையின் மேம்பாட்டிற்காக வும் தேவையான மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்கும் ரூ.100 கோடி நிதி கேட்டு பல்வேறு போராட்டங் களை நடத்தி தமிழ்நாடு அரசிடம் பெற்றுத் தந்துள்ளன. தொடர்ந்து தேவையான மருத்துவர்கள் செவிலியர்களை நிய மிக்க குரல் கொடுத்து வந்துள்ளன. தற்போது பல்வேறு உயிர்காக்கும் மருத் துவச் சிகிச்சைகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு சுகாதா ரத்துறை அமைச்சர் மருத்துவமனையின் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை பிரிவிலும், ஆர்த்தோ பிரிவிலும் கட்டண வார்டுகளை திறந்து வைத்துள் ளார். கட்டண வார்டு திட்டம் அமல் படுத்தப்பட்டதால் இலவச சிகிச்சை பெறு வோரின் வாய்ப்பு பறிக்கப்படுவதாக உள்ளது. பொது சுகாதாரத்தில் முன் னோடி மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு. இந்தச் சூழலில் கட்டண வார்டுகள் திறப்பது அரசு இலவச மருத்துவத்தை உறுதிப்படுத்துவதிலிருந்து விலகுவ தாகும். சேவைத் துறையாக உள்ள மருத்துவத்துறையை தனியார்மயமாக மாற்ற கட்டண வார்டுகள் வழிவகுக்கும் என்பதுதான் பாதகமான அம்சம். இது படிப்படியாக கார்ப்பரேட்டுகளின் கையில் ஒப்படைக்கும் முடிவாக அமைந்துவிடக்கூடாது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் மிக சிறப்பான முறையில் பொது சுகாதார பங்களிப்பு இருந்தது. அதில் அரசு இராஜாஜி மருத்துவமனையின் பங்களிப்பும் மகத்தானது .  மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங் களில் மிகவும் பின்தங்கிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர் . இவர்களுக்கு முற்றிலும் இலவச மருத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. தமிழ்நாடு அரசும், சுகாதாரத்துறையும் அரசு இராஜாஜி மருத்துவமனை முற்றி லும் இலவச மருத்துவமனையாக தொடர்ந்து செயல்படுவதற்கு, கட்டண  வார்டு திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.