பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் வெளியீடு
145 பேர் முழு மதிப்பெண்
சென்னை, ஜூன் 27 - 2025-26 கல்வியாண்டு பொறியியல் படிப்பு கலந்தாய் வுக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெள்ளிக்கிழமை வெளி யிட்டுள்ளார். கிண்டியில் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தர வரிசைப் பட்டியலை வெளியிட்ட அமைச்சர், 145 பேர் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக தெரிவித்தார். 2.41 லட்சம் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் www.tneaonline.org இணையதளத்தில் தரவரிசை எண்ணை தெரிந்து கொள்ளலாம். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 40,645 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். அரசுப் பள்ளி மாண வர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 51,004 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பொதுப் பிரிவில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சகஸ்ரா மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். நாமக்கல் லைச் சேர்ந்த கார்த்திகா இரண்டாம் இடமும், அரியலூ ரைச் சேர்ந்த அமலன் ஆன்டோ மூன்றாம் இடமும் பிடித்து உள்ளனர். முதல் 10 இடங்களில் 7 இடங்களை மாணவி கள் கைப்பற்றியுள்ளனர். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கட லூரைச் சேர்ந்த தாரணி முதலிடம் பெற்றுள்ளார்.