tamilnadu

img

மதுபான உற்பத்தி நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை முடிந்தது

மதுபான உற்பத்தி நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை முடிந்தது

டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான உற்பத்தி நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை மூன்று நாள்  சோதனை நிறைவுபெற்றது. தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனத் துக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களில் கலால் வரி ஏய்ப்பு உள்பட பல்வேறு முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத பணப்பரி வர்த்தனை நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படை யில், அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 6 ஆம் தேதி  சென்னை, கரூர், கோவை, விழுப்புரம், புதுக்கோட்டையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம், குடோன், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான அக்கார்டு, எஸ்என்ஜெ, கால்ஸ், எம்ஜிஎம் உள்ளிட்ட மதுபான  நிறுவனங்கள், அவற்றின் ஆலைகள், சென்னை முதுநிலை  மண்டல மேலாளர் அலுவலகம், முன்னாள் மதுவிலக்கு இணை  ஆணையர் வீடு என பல்வேறு இடங்களில் மூன்று நாட்களாக  சோதனை நடைபெற்றது.