tamilnadu

img

மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி

திருச்சிராப்பள்ளி, மே 27- திருச்சியில் கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன தமிழ்நாடு அமைப்பின் மகளிர் மாநில மாநாடு சனிக்கிழமை  (மே 27) நடை பெற்றது. மாநாட்டிற்கு அன்புசெல்வி, உமா மகேஸ்வரி, மீனா ஆகியோர் தலைமை வகித்தனர். சம்மேளன மாநிலத் தலைவர் தி.தமிழரசு துவக்கி வைத்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி பெண்களின் உரிமைகளையும், அதை பெறவும், அதை பாதுகாக்கவும் போராட வேண்டிய அவசியத்தை விளக்கி பேசினார். மகளிர் மாநில கூட்டுறவு வங்கி ஊழியர்  ஒருங்கிணைப்பு குழு கன்வீனர் கே.ஜெய லட்சுமி வேலை அறிக்கையை சமர்ப்பித் தார். இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் ஒருங்கிணைப்பு குழு எஸ்.புவனேஸ்வரி வாழ்த்திப் பேசினார். மாநாட்டில் நாடாளுமன்றம், சட்ட மன்றங்களில் மகளிருக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் பாலியல் வன்முறை (தடுப்பு மற்றும் குறை தீர்ப்பு) சட்டம் 2013இன் படி பாலியல் புகார் கமிட்டி அமைக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் பெண் ஊழியர்களுக்கு தனிக்கழிப்பறை அமைக்க வேண்டும். மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து கேரளா மாநிலம் போல் தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள 128 நகர கூட்டுறவுகளை மாவட்ட அளவில் ஒருங்கிணைத்து பலப்படுத்த வேண்டும். மத்திய, நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், மாநில சம்மேளன பொதுச் செயலாளர் இ.சர்வேசன் தொகுப்பு ரையாற்றினார். மாநாட்டின் துவக்க நிகழ்ச்சி யாக நூற்றுக்கணக்கான பெண் ஊழியர்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. முன்னதாக எஸ்.ரமா வரவேற்றார். திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் டி.ஆர்.ரகுராமன் நன்றி கூறினார்.