சென்னை, ஜூலை 31- தமிழகத்தில் முதலீடுகள் குறித்து பொய் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமியின் குற் றச்சாட்டுக்கு தொழில்துறை அமைச் சர் தங்கம் தென்னரசு பதிலளித் துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘வேதாந்தா மற்றும் பாக்ஸ்கான் நிறுவனம்’’ சார்பில் தமிழ்நாட்டில் செய்யவிருந்த முத லீடு ஏதோ மகாராஷ்டிர மாநிலத் திற்குச் சென்று விட்டதாக எதிர்க் கட்சித் தலைவர் அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்பது கூடத் தெரி யாத அறியாமையில் அறிக்கை விடு வதற்கு கடும் கண்டனத்தைத் தெரி வித்துக் கொள்கிறேன். வேதாந்தா நிறுவனத்தைப் பொறுத்தவரையில், சுற்றுச்சூழல் பாதிப்புக் காரணங்களுக்காக மாசுக் கட்டுப்பாடு வாரியம், இயக்குவ தற்கான இசைவினை (Consent to Operate) வழங்க மறுத்துள்ளது. இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்ற அடிப் படை விவரம் கூட எதிர்க்கட்சித் தலை வருக்கு தெரியாமல் போனதில் வியப்பில்லை. அண்மையில், பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் இந்தியப் பயணம் மேற்கொண்டபோதும், அவருடன் தமிழ்நாடு அரசின் சார் பில், தொழில் வழிகாட்டி நிறுவனத் தின் மேலாண்மை இயக்குநர் இந்தி யத் தலைநகரான புதுதில்லியில் சந்தித்துப் பேசினார்.
மின்வாகனம், செமி கண்டக்டர் துறைகளில் முதலீடுகள்
இந்தச் சந்திப்பின்போது, பாக்ஸ்கான் நிறுவனம், மின்வாக னம் மற்றும் செமி கண்டக்டர் ஆகிய துறைகளில் முதலீடுகள் மேற் கொள்ள உள்ளதைச் சுட்டிக்காட்டி, அத்திட்டங்களை தமிழ்நாட்டில் நிறு விடுவதற்கு அழைப்பு விடுத்தார் கள். இதனைத் தொடர்ந்து தொழில் துறை அமைச்சர் என்கிற முறையில், நானும் பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு இதுதொடர்பாகக் கடிதம் எழுதி னேன். இதற்கு பதிலளிக்கும் வகை யில் ‘‘மின்வாகன உற்பத்தி மற்றும் செமி கண்டக்டர் புனரமைப்பு உற் பத்தித் திட்டங்களைத் தமிழ்நாட்டில் நிறுவிடப் பரிசீலிப்பதாக’’ பாக்ஸ் கான் நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில், ஐஜிஎஸ்எஸ்வி (IGSSV) நிறுவனம், புராஜக்ட் சூரியா (Project Suria) என்ற ஒரு செமி கண்டக்டர் புனரமைப்பு (Semi- conductor Fab) உயர் தொழில் நுட்பப் பூங்காவை 300 ஏக்கர் பரப்பளவில் அமைத்திட, தமிழ்நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந் தம் மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தில் உறுதி செய்யப் பட்டுள்ள முதலீடு 25,600 கோடி ரூபாய் மற்றும் 1500 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு ஆகும். அது மட்டுமின்றி, இப்பூங்காவில் அமைக்கப்படும் பல்வேறு திட்டங் கள் மூலமாக 25,000 நபர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைத்தி டவும் வாய்ப்பு உள்ளது.
22 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
மின் வாகனங்கள் மற்றும் உபகர ணங்களுக்கான முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரு கிறது. கடந்த ஒரு வருட காலத்தில், 11,580 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 28,612 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 22 திட்டங்களுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளது. லூகாஸ் TVS, TI குழுமம், SRIVARU மோட் டார்ஸ், BFW, சிர்மா SGS போன்ற பெரும் நிறுவனங்கள் தங்களது உற் பத்தித் திட்டங்களை தமிழ்நாட்டில் நிறுவிட முன்வந்துள்ளனர். இவ் வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.