ஒன்றிய அரசுக்கு கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 17 - “உழைப்பாளி மக்கள், சிறு- குறு தொழில் முனைவோர் மீது ஒன்றிய பாஜக அரசு மேலும் மேலும் சுமை ஏற்றக் கூடாது” என்றும், மாறாக, “கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தின் மீது 2 விழுக்காடு கார்ப்ரேட் வரி விதிக்கப்பட வேண்டும்” என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இந்தக் கோரிக்கையை முன் வைத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்ட இயக்கத் திற்குத் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் புதனன்று (ஜூலை 17) சென்னையில் நடை பெற்றது. இதனையொட்டி செய்தி யாளர்களிடம் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கு பிந்தைய அரசியல் நிலைமைகளை விவாதித்து சில முக்கியமான முடிவு களை எடுக்க உள்ளோம். 2024 செப்டம்பர் மாதம் கிளை மாநாடு களில் தொடங்கி 2025 ஏப்ரல் மாதம் வரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றிய, மாவட்ட, மாநில மற்றும் அகில இந்திய மாநாடுகள் மாநாடுகள் நடைபெறவுள்ள நிலையில், அதற் கான திட்டமிடலையும் மேற்கொள்ள உள்ளோம்
கார்ப்பரேட் வரி அவசியம்
தமிழகத்தில் பாஜக நடவடிக்கை களை முறியடிக்கவும், சந்தர்ப்பவாத கூட்டணி ஆட்சி அமைத்துள்ள மோடி அரசு மீண்டும் மீண்டும் மாநில உரிமை களை பறிப்பதைக் கண்டித்தும், மாநில சுயாட்சி, சமூக நீதி கோரிக்கைகளை வலியுறுத்தி இயக்கம் நடத்த திட்டமிட உள்ளோம். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில், மக்கள் மீதான சுமையை மேலும் பல மடங்கு அதி கரித்து, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூடுதல் வரிச் சலுகை அளிக்க உள்ளதாக தெரிகிறது. ஏழை - எளிய நடுத்தர உழைப்பாளி மக்கள், சிறு, குறு தொழில் முனைவோர் மீது சுமை களை ஏற்றுவதற்கு மாறாக, கார்ப்ப ரேட் நிறுவனங்களின் லாபத்தின் மீது 2 விழுக்காடு கார்ப்பரேட் வரி விதிக்கப்பட வேண்டும். இதற்கான இயக்கத்தையும் நடத்த உள்ளோம்.
என்கவுண்ட்டரை ஏற்க முடியாது
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளை தப்பிக்க விடாமல், தண்டனைபெற்று தரும் வகையில் காவல்துறை நட வடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான உறுதியை முதலமைச்சரும் தந்துள் ளார். அதை நிறைவேற்றவேண்டும். அதேசமயம், சமூக விரோதி களை அடக்குகிறோம் என்ற பெயரில் காவல்துறை அடிக்கடி மோதல் கொலை செய்வது மோசமான நடவடிக்கை. அது கண்டனத்திற்குரி யது. எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருந்தாலும் நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றுத்தர வேண்டும். சட்ட நெறிமுறைகளை மீறி காவல் துறையே நீதிபதியாக மாறி தண்டனை வழங்குவது சரியானதல்ல. ஆம்ஸ்ட்ராங் கொலையில் கை தான திருவேங்கடம் மீது மிகுந்த சந்தேகத்திற்குரிய வகையில் என்கவுண்ட்டர் நடந்துள்ளது. காவல் துறை மீதான நம்பிக்கையின்மையை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டையில் கூட ஒரு என்கவுண்ட்டர் நடந்துள்ளது. காவல் துறைக்கு கட்டுப்பாடற்ற அதிகாரம் அளிக்கக் கூடாது. அவ்வாறு அளிப் பது அரசுக்கு அவப்பெயரைதான் உருவாக்கும். என்கவுண்ட்டர் களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. மின் கட்டணத்தைத் திணிக்கும் ஒன்றிய அரசு மின்வாரியத்தைப் பல கூறுகளாக பிரித்து தனியார் மயமாக்கும் கொள் கையை ஒன்றிய அரசு பின்பற்றுகிறது. அதை மாநில அரசுகள் மீது திணிக் கிறது. மாநில அரசின் மின் கட்டண உயர்வை நாங்கள் ஏற்கவில்லை; கட்டண உயர்வைத் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம். மாநில அரசின் கீழ் செயல்படும் மின் வாரியங்களை ஒன்றிய அரசு பின் வாசல் வழியாக கட்டுப்படுத்துவது சரி யல்ல. இவற்றை வலியுறுத்தி இயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் கூறினார்.
காவிரி விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு பொறுப்பு
மேலும், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் சிபிஐ விசாரணை மோசமாக இருப்பதை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித் துள்ளது. எனவே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தேவையற்றது. மாநில காவல்துறை விசாரணையே போதுமானது. காவிரி விவகாரத்தில் பேச்சு வார்த்தைக்கு அவசியம் இல்லை. நீண்டகாலம் வழக்கு நடந்து உச்ச நீதி மன்றம் அளித்துள்ள இறுதித் தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது. அதை ஒன்றிய அரசு செய்ய வேண்டும். முத லமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள் ளார். அரசின் முடிவை வரவேற் கிறோம். இவ்வாறு கே. பாலகிருஷ் ணன் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது மாநிலக்குழு உறுப்பினர்கள் வே.ராஜசேகரன், இரா. சிந்தன் ஆகி யோர் உடனிருந்தனர்.