சென்னை, பிப்.19- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-2, 2 ஏ தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள 5,529 காலிப் பணியிடங்களுக்கு (குரூப் 2 - 116, குரூப் 2ஏ - 5,413) பிப்ரவரி 23 முதல் மார்ச் 23-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், மே 21-ஆம் தேதி முதல் நிலை எழுத்துத் தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 117 மையங்க ளில் நடத்தப்படும் இந்த தேர்வின் முடிவுகள் இரண்டே வாரத்தில் அதாவது ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்படும் எனவும், முதன்மை தேர்வு செப்டம்பர் மாதம் நடத்தப்படும் என டிஎன்பி எஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள் ளார்.
தேர்வு நேரம் மாற்றம்
பொதுவாக டிஎன்பிஎஸ்சி காலை நேர தேர்வு கள் 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு நிறைவு பெறும். ஆனால் நடப்பாண்டில் தேர்வு தொடங்கும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 வரை நடத்தப்பட உள்ளது. மதியம் நடைபெறும் தேர்வு கள் வழக்கம்போல நடைபெறும் என அறி விக்கப்பட்டுள்ளது.