சென்னை,ஜன.21- திராவிடர் கழகம் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க. ஆதரவு அளிப்பதாக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்திய விடுதலையின் பவள விழாவை முன்னிட்டு, எதிர்வரும் ஜனவரி 26 குடியரசு நாளில், புதுதில்லியில் நடை பெறும் அலங்கார அணி வகுப்பில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் அணி வகுப்புக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துவிட்டது. மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், செக்கி ழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், விடுத லைக் கவிஞர் பாரதியார் ஆகியோரின் உருவங்கள் இடம்பெற்ற தமிழ்நாடு அரசின் அணிவகுப்பை, ஒன்றிய அரசு நியமித்த பத்து பேர் கொண்ட குழு நிராகரித்து விட்டது. தமிழ்நாடு முதல்வரும், தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்றி ணைந்து எழுப்பிய கண்டனக் குரலை டெல்லி அரசு முரட்டுத்தனமாக ஏற்க மறுத்து விட்டது. பலமுறை இதுகுறித்து எடுத்து விளக்கிய பின்பும், தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் வகையிலும், கூட்டாட்சி நெறி முறைகளை குழி தோண்டி புதைக்கும் வகை யிலும் மோடி அரசு முடிவெடுத்து செயல் படுவது, வன்மையான கண்டனத்திற்கு உரி யதாகும். தில்லி அரசு அனுமதிக்க மறுத்த ஊர்தி கள், தமிழ்நாடு அரசு நடத்தும் குடியரசு நாள் அணிவகுப்பில் இடம்பெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பின்பும், ஒன்றிய அரசு மாநில உணர்வுகளை மதிக்கத் தயாராக இல்லை என்பது தெரிந்துவிட்டது. குடியரசு நாள் விழா ஊர்வலத்தில், தமிழக மக்களையும் மக்களாட்சி பண்பு களையும் இழிவு செய்யும், ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்கினைக்கண்டித்து, ஜனவரி 26 அன்று கண்டன ஆர்ப்பாட்டங் களை நடத்துமாறு திராவிடர் கழகம் அழைப்பு விடுத்துள்ளதை ம.தி.மு.க. வரவேற்கிறது. அனைத்துக் கட்சி அலுவலகங்கள் முன்பும், வீடுகளின் முன்பும் தனிநபர் இடை வெளிவிட்டு, அமைதி வழியில் கண்டன குரல் எழுப்ப வேண்டும். இவ்வாறு வைகோ தெரிவித்திருக் கிறார்.