சென்னை,நவ.1- தீபாவளி பண்டிகை கொண்டாட் டத்தில் பட்டாசு வெடிக்கும்போது சிலர் ஆர்வக் கோளாறில் தங்கள் கைகளில் வைத்தும், பிறர் மீது எறிந்தும் பட்டாசு வெடிப்பர். இதனால் ஆண்டுதோறும் தீ விபத்துகள் ஏற்படும். இந்த தீ விபத்து களை தடுப்பதற்காக ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப் பட்டு வருகிறது. அதோடு பட்டாசை பாதுகாப்பாக வெடிக்கவும், காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக குறிப் பிட்ட நேரத்தில் வெடிக்கவும் தமிழ் நாடு அரசால் அறிவுறுத்தப்படுவதும் வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் நடத்தப்பட்டு, அறிவுறுத்தப்பட்டன. எனினும் தீபாவளியின்போது பட்டாசுகள் மூலம் ஏற்படும் தீ விபத்துகளை தவிர்க்க முடியாத தாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையின்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தீ விபத்துகள் கடந்த ஆண்டை விட குறைவு என தமிழ்நாடு தீயணைப்பு - மீட்புப்பணிகள் துறை தெரிவித்துள்ளது. “கடந்தாண்டுகளில் தீபாவளி திருநாளன்று சென்னை மாநகரில் பட்டாசு வெடிப்பதால் ஏற்பட்ட தீவிபத் தின் அடிப்படையில் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக 21 இடங்களில் தீயணைப்பு ஊர்திகள் பாதுகாப்பு பணிபுரிய வெளி மாவட்டங்களிலிருந்து கூடுதலாக வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. பொதுமக்கள் மத்தியில் பாது காப்பாக தீபாவளி கொண்டாட விழிப் புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் என 2406 இடங்களில் விழிப்புணர்வு பிரச் சாரங்கள் நடத்தப்பட்டன. இதில் சென்னை மாநகரில் மட்டும் 276 இடங்களில் இப்பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு தமிழகத்தில் தீபா வளி திருநாளன்று பட்டாசு மற்றும் இராக்கெட் வெடித்ததில் 254 இடங் களில் தீ விபத்துகள் ஏற்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 102 தீ விபத்து கள் பட்டாசு மற்றும் ராக்கெட் வெடித்ததில் நிகழ்ந்தன. இந்த ஆண்டு தொடர் மழை மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நட வடிக்கையால் தீபாவளி திருநா ளன்று தமிழகத்தில் 150 தீ விபத்துகள் பட்டாசு மற்றும் இராக்கெட் வெடித்த தில் ஏற்பட்டுள்ளது. இதில் சென்னை யில் 48 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தீ விபத்துகள் மிக குறைந்த எண்ணி க்கையில் நிகழ்ந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.