tamilnadu

img

காட்டுநாயக்கன் மக்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்க மறுப்பது அநீதி!

மதுரை, நவ.16- காட்டுநாயக்கன் மக்களுக்கு பழங்குடி யினர் சான்றிதழ் வழங்க மறுப்பது அநீதி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார். அரசாணையின்படி மதுரை வருவாய் கோட்டாட்சியர், காட்டுநாயக்கன் மக்க ளுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மதுரை பரவை சத்தியமூர்த்தி நகர் பகுதி யைச் சேர்ந்த காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் 500-க்கும் மேற்பட்டோர், தங்கள் குழந்தைகளுக்குச் சாதிச்சான்றிதழ் மறுக்கப்  படுவதைக் கண்டித்து, 10-ஆவது நாளாக (நவ.16) போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சனிக்கிழமையன்று போராட்டக்களத்திற்கே நேரடியாக சென்று சந்தித்தார். அவர்களின் முறையீடுகளை கேட்டறிந்ததுடன், போராட்டத்தையும் ஆத ரித்துப் பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:

சட்டம் வழங்கிய நீதியை அதிகாரிகள் தட்டிப்பறிப்பதா?

சட்டம் வழங்கியிருக்கும் நீதியை அதி காரிகள் தட்டிப்பறிக்கும் நிலையில், அதனை  மீண்டும் பெறுவதற்கான போராட்டத்தை  காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் நடத்திக்  கொண்டிருக்கின்றனர்.பொதுவாக ஆண்  கள் மட்டுமே போராட்டங்களில் பங்கேற்கும்  சூழலில், இந்த போராட்டத்தில் அதிகளவில்  பெண்கள் கலந்து கொண்டிருப்பது உற்சா கத்தை அளிக்கிறது. இதேபோல் பெண்கள் விழிப்படைந்து போராட வருவார்கள் எனில் நாட்டில் அநியா யமே நடைபெறாமல் தடுத்துவிடலாம். பெண்  கள் அதிகளவில் பங்கேற்று நடைபெற்ற  போராட்டங்கள் இதுவரை தோல்வியடைந்த தாக வரலாறு இல்லை. எனவே, நீங்கள் நடத்தும் போராட்டம் வெற்றிபெறும். இது போன்று பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் உரிமைகளைப் பெறவும் போராட வேண்டும்.

இந்தியாவில் குழந்தைகள்  சாதியோடு பிறக்கும் அவலம்

இந்திய நாட்டில் பிறக்கும் குழந்தை சாதியு டன்தான் பிறக்கிறது. காட்டுநாயக்கன் சமூகத்தில் பிறந்தால் அந்த குழந்தை காட்டு நாயக்கன் சமூகம்தானே. அவர்களுக்கு காட்டு நாயக்கன் சாதிச்சான்றிதழ்தானே கொடுக்க வேண்டும். வேறு சான்றிதழா கொடுக்க முடியும். இந்த விஷயத்தில் அரசு அதிகாரிகள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்? இந்த மக்க ளுக்கு சான்றிதழ் கொடுக்காமல் ஏன் அலைக் கழிக்கிறீர்கள். காட்டுநாயக்கன் மக்களின் பிள்ளைகள் படித்து முன்னேறிவிடக் கூடாது, வேலைவாய்ப்பு பெற்றுவிடக் கூடாது, சமூ கத்தில் அந்தஸ்து பெற்றுவிடக் கூடாது என்ப தற்காக சான்றிதழ் கொடுக்காமல் இழுத்த டிக்கிறீர்களா? 

கோட்டாட்சியருக்குப் பதில் வட்டாட்சியரை நியமிக்க வேண்டும்

மருத்துவப்படிப்புக்கு எஸ்.டி. சான்றிதழ் இருந்தால் அதற்குரிய இடஒதுக்கீட்டு சலுகை யுடன் படிக்க முடியும். இல்லாவிட்டால் இட ஒதுக்கீட்டைப் பெற முடியாது. மருத்துவப் படிப்பை தொடர முடியாது; அதனை ரத்து செய்துவிடுவோம் என்று கூறுகின்றனர். எஸ்.டி. சான்றிதழைப் பெற காட்டுநாயக்கன் சமூக மக்கள் படாதபாடுபடுகின்றனர். அனைத்து சாதிச்சான்றிதழ்களையும் வட்டாட்சியர்களே கொடுக்கின்றனர். ஆனால், எஸ்.டி. சான்றி தழை மட்டும் வருவாய் கோட்டாட்சியர் தான்  கொடுக்க முடியும் என்ற நடைமுறை உள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்து, எஸ்.டி. சான்றிதழையும் வட்டாட்சியரே கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக போராடி வரு கிறது. எனவே, காட்டுநாயக்கன் மக்களுக்கு அலைக்கழிக்காமல் சாதிச்சான்றிதழ் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோர் ஒரு சாதி,  பிள்ளைகள் வேறு சாதியா? பெற்றோர்களுக்கு எஸ்.டி. சான்றிதழ் இருக்கும் போது, அவர்களின் பிள்ளைக ளுக்கும் அந்த சான்றிதழ்தானே கொடுக்க வேண்டும். பிள்ளைகளும் அந்த சமூகத்தினர் ்தானே. அரசு அதிகாரிகள் ஏன் சான்றிதழ் கொடுக்க மறுக்கிறார்கள்? ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவ னங்களில் வேலைவாய்ப்புக்கு பழங்குடியின மக்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீடு உள்ளது. சான்றிதழ் வழங்கப்படாததால் ஏராளமான பணி யிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. வடமாநி லங்களைச் சேர்ந்த பழங்குடியினரே தமிழ கத்தில் உள்ள ஒன்றிய அரசின் நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். எஸ்.டி. சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தால் தமிழக பழங்குடி மக்கள் அந்த வேலைவாய்ப்புகளை பெற்றிருப்பார்கள்.

உயர் நீதிமன்றமே உத்தரவிட்டும் சான்றிதழுக்கு அலைக்கழிப்பு

இந்த சான்றிதழ் பிரச்சனைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் பல்வேறு போராட்டங் களை நடத்தியது. சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம், பழங்குடி மக்க ளுக்கு சாதிச்சான்றிதழ் வழங்குவதற்கான விதிமுறைகளை வகுத்து வழிகாட்டுதல்களை வழங்கியது. நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் தமிழக அரசு கடந்த ஆண்டில் அரசாணை வெளியிட்டது. பெற்றோருக்கு எஸ்.டி. சான்றிதழ் கொடுத்து விட்டால் எந்த விசாரணையுமின்றி அவர்களது குழந்தைக ளுக்கும் அந்த சான்றிதழையே கொடுக்க வேண்டும் என்று அரசாணையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.  போராட்டங்களுக்கு சிபிஎம் துணை நிற்கும் இந்த அரசாணையின்படி மதுரை வருவாய் கோட்டாட்சியர், இந்த காட்டுநாயக்கன் சமூக மக்களுக்கு சாதிச்சான்றிதழை வழங்க வேண்டும். இதில் மதுரை மாவட்ட ஆட்சியர் ஏன் கண்டுகொள்ளாமல் நடவடிக்கை எடுக்கா மல் உள்ளார்? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், துறைச்செயலாளரிடம் முறையிட்டு, காட்டுநாயக்கன் மக்களுக்கு எஸ்.டி. சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்போம். நீங்கள் நடத்தும் போராட்டமும், கோரிக்கையும் வெற்றிபெற மார்க்சிஸ்ட் கட்சி உறுதுணையாக இருக்கும். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் எஸ். பாலா, ஒன்றியச் செயலாளர்  ம. தனபாலன், மாவட்டக்குழு உறுப்பினர் ச. மலர்விழி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே. முருகேசன், கே. பாண்டி யன், எம். முருகன் மற்றும் கிளைச் செயலா ளர்கள் பலர் கலந்து கொண்டனர்.