tamilnadu

img

அரியலூரில் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

அரியலூர் கிருஷ்ணன் கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற சீரமைப்புப் பணியின் போது 285 ஆண்டுகளுக்கு முன்பு ஜமீன்தார் காலத்தில் நிலதானம் வழங்கிய 4 அடி உயரமுள்ள கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் தெரிவிக்கப் பட்டதையடுத்து, அரியலூர் அரசு கலைக் கல்லூரி வரலாற்று துறைத் தலைவர் ரவி, சம்பவ இடத்துக்கு வந்து கல்வெட்டை ஆராய்ச்சி மேற்கொண்டார். அதன் பிறகு அவர் தெரிவிக்கையில், கல்வெட்டில் வாமன அவதார சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் சுமார் 1739 ஆம் ஆண்டு அரியலூர் ஜமீன்தார் விஜய ஒப்பில்லாத மழவராயரால் பொறிக்கப்பட்டுள்ளது. பெருமாள் கோவிலுக்கும், கிருஷ்ணன் கோவிலுக்கும் நிலதானம் வழங்கிய தகவல்களும் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன. பலகை கல்வெட்டில் இடம்பெற்றுள்ள தகவல்களை சேகரித்து வருகிறோம். விரைவில் படிமங்கள் எடுக்கப்பட்டு, கல்வெட்டின் முழு வாசகமும் வெளியிடப்படும்” என அவர் கூறினார்.