tamilnadu

புதுவையிலும் வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்

புதுச்சேரி, ஜன.16- புதுச்சேரியில் எப்போதும் காணும் பொங்கல் சுற்றுலா தலங்களில் மக்கள் அதிகளவில் கூடுவது வழக்கம். கொரோனா காலத்தினால்அவை அனைத்தும்மாறிவிட்டன. புதுச்சே ரிக்கு காணும் பொங்கலன்று புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மற்றும் சென்னை உள்ளிட்ட பல மாவட்ட மக்கள் அதிகளவில் வருவார்கள். தமிழகத்தில் ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் புதுச்சேரியில் சில கட்டுப்பாடுகள் மட்டுமே உள்ளன. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை. இதனால் புதுச்சேரி-தமிழக எல்லைகளில் இரு மாநில காவல்துறையினரும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  காணும் பொங்கல் நாளில் மணக்குள விநாயகர்ஆலயம்,அன்னை ஆசிரமம், கடற்கரைச் சாலை, பாரதி பூங்கா, நோணாங்குப்பம் படகு இல்லம் என அனைத்து சுற்றுலா தலங்க ளும் நிரம்பி வழியும். ஆனால் இம்முறை கொரோனா பரவலால் தமிழ கத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப் ்பட்டுள்ளது. இதனால் தமிழக மக்கள் புதுச்சேரிக்குள் வர முடியவில்லை. இதனால் வழக்கமாக காணும் பொங்க லால் களைக்கட்டும் சுற்றுலாத்தலங்கள் முற்றிலும் களை இழந்தன. பாரதி பூங்காவில் சிறார்களும், உள்ளூர் மக்கள் மட்டும்குறைந்த அளவில் வந்திருந்தனர். கடற்கரைச் ்சாலைஅதிகளவில்வெறிசோடியது. படகு இல்லத்திலும் குறைந்த ளவே மக்கள் வந்தனர்.

வாகனங்கள் எல்லைப்பகுதிகளில் கட்டுப்படுத்தப் ்பட்டதால் காணும் பொங்கல் இம்முறை களையிழந்தது.  புதுச்சேரியிலிருந்து தமிழக பகுதிகளுக்கு எந்த வாகனத்தையும் தமிழக காவல்துறையினர் அனும திக்கவில்லை. இதேபோல புதுச்சேரி யில் எந்த தடையும் இல்லாத காரண த்தால் வெளி மாநில மக்களும் சுற்றுலாப் பயணிகளும் அனுமதிக் ்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி சான்றிதழ் காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப் ்படுகிறார்கள். அப்படி இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். புதுச் ்சேரியில் நோய்த்தொற்று அதிகரித்து வருவது காரணமாகவும் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் வருகை மிக குறைவாக உள்ளது. இதனால் புதுச்சேரி- தமிழக எல்லைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அத்துடன் நெடுஞ்சாலைகளும் வெறிசோடின.