வருசநாட்டில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
இலவம் பஞ்சுக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்திடுக!
வருசநாடு கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இலவம் பஞ் சுக்கு நிரந்தர விலை நிர்ண யம் செய்யக்கோரி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப் பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாயி கள் சங்க மாவட்டச் செய லாளர் கண்ணன் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் போஸ், மாவட்டக் குழு உறுப்பினர் நாகராஜ் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். ஆர்ப்பாட்டத்தில் இல வம் பஞ்சு உற்பத்தியில் கிடைக்கும் வருட வருமா னத்தை மட்டும் நம்பி ஆயி ரக்கணக்கான விவசாய குடும்பங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளா கவே இலவம் பஞ்சு விலை தொடர் சரிவை சந்தித்து வரு கிறது. கடந்த ஆண்டு 100 ரூபாய் வரை விற்பனையான பஞ்சு தற்போது ரூ.40 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு அரசு சார் பில் நிவாரணம் வழங்க வேண்டும் என கட்சி நிர்வாகி கள் வலியுறுத்தி பேசினர். அதைத் தொடர்ந்து கதர் கிராம வாரியம் மூலம் இல வம் பஞ்சை அரசே கொள் முதல் செய்ய வேண்டும். விவசாயிகளை அழைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி இலவம் பஞ்சுக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என வலி யுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது. இதில் வருசநாடு பகுதி யைச் சேர்ந்த 50-க்கும் மேற் பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.