tamilnadu

img

வீட்டு வரி ரசீது வழங்க கோரி சிபிஎம் தலைமையில் பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு

வீட்டு வரி ரசீது வழங்க கோரி சிபிஎம் தலைமையில்  பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு

திருச்சிராப்பள்ளி, ஏப்.28-  திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில், திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை பகுதி செயலாளர் விஜயேந்திரன் தலைமையில், அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறி இருந்ததாவது: திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 49 ஆவது வார்டுக்குட்பட்ட முடுக்குப்பட்டியில் சுமார் 175 குடும்பங்கள் நான்கு தலைமு றைகளாக 80 வருடங்களாக வசித்து வருகிறோம். குடிதண்ணீர் குழாய், பாதாள சாக்கடை திட்டம் இப்பகுதியில் உள்ளது. ஆனால் வீட்டு வரி ரசீது இல்லாத காரணத்தினால் இத்திட்டங்களை இப்பகுதி மக்கள் பயன்படுத்த முடியவில்லை. முடுக்குப்பட்டி பொதுமக்கள் வீட்டு வரி செலுத்த தயாராக உள்ளார்கள். எனவே மக்களின் வாழ்வாதாரம் மேம்பட உடனடியாக வீட்டு வரி ரசீது வழங்கி குடிநீர் குழாய், பாதாள சாக்கடை இணைப்பு வழங்க வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மாவட்ட ஆட்சியரிடம் மனுவை கொடுத்தபோது, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின், முடுக்குப்பட்டி கிளைசெயலாளர் கணேசன், மாதர் சங்க பகுதிச் செயலாளர் புவனேஸ்வரி, சுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.