tamilnadu

img

வேப்பத்தூரில் தோழர் பி.ராமமூர்த்தி இல்லத்தில் நினைவஞ்சலி

கும்பகோணம், டிச.15- விடுதலைப் போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவருமான தோழர் பி.ராமமூர்த்தி அவர்களின் 36 ஆவது நினைவு தின புகழஞ்சலி நிகழ்ச்சி அவர் பிறந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம், வேப்பத்தூர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் நாகேந்தி ரன் தலைமை வகித்தார்.   மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மனோ கரன், அருளரசன். மாவட்டக்குழு உறுப்பினர் சா.ஜீவபாரதி மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.  முன்னதாக தோழர் பி.ராம மூர்த்தி உருவச்சிலைக்கு மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி மாலை யணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் செங்கொடி ஏற்றினார். 

செம்படை பேரணி 

கும்பகோணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயக மாதர் சங்கம், சிஐடியு, வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் சார்பில்  செம் படைப் பேரணி நடைபெற்றது.பேரணியை கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் துவக்கி வைத்தார். கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் இருந்து மீன் மார்க்கெட் வரை நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.