tamilnadu

img

சிபிஎம் அகில இந்திய மாநாடு நிதி அளிப்பு பொதுக்கூட்டம்

சிபிஎம் அகில இந்திய மாநாடுநிதி அளிப்பு பொதுக்கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை மதுரையில் நடைபெறுகிறது. இதையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட தா.பேட்டை ஒன்றியக்குழு சார்பில் தா.பேட்டை கடைவீதியில் அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாநாட்டு நிதி ரூபாய் இரண்டரை லட்சத்தை, பேரூராட்சி கவுன்சிலர் சத்யா, மூத்த தோழர் சுப்பிரமணியன் மற்றும் மாவட்டக்குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வழங்க, அதனை மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசீலன் பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சந்திரமோகன், பாலகுமார் ஆகியோர் பேசினர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சேகர், வீரவிஜயன், காமராஜ், மரகதம், யசோதா, ரெங்கராஜ், லோகநாதன், சுதாகர் தாப்பேட்டை நகர கிளை செயலாளர்கள் நடராஜ், ஆனந்தன், ஜெய்ஹிந்த் ரவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.