tamilnadu

img

சிபிஎம் ஆர்ப்பாட்டம் விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடுக!

சிபிஎம் ஆர்ப்பாட்டம் விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடுக!

கோயம்புத்தூர், ஏப்.20- தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விசைத்தறியாளர்களின் கூலி உயர்வுக் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஞாயிறன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கூலி உயர்வு மற்றும் மின் கட்டண குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மற்றும் திருப்பூர்  மாவட்டங்களைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த ஒரு மாத  காலமாக வேலை நிறுத்தப் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கோவை, கருமத்தம்பட்டியில் கடந்த  ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் 12 விசைத்  தறியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து  தொடர் உண்ணாவிரதப் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனி டையே, விசைத்தறியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கோவை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையில், 60 சதவிகித கூலி உயர்வு  கோரிய நிலையில், ஜவுளி உற்பத்தி யாளர்கள் வெறும் 7 சதவீத உயர்வை மட்டுமே முன்மொழிந்ததால் உடன்  பாடு எட்டப்படவில்லை. 15 ஆயிரத்திற் கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளதால், நாளொன்றுக்கு சுமார் 35 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஞாயிறன்று பேரணி யாக போராட்டம் நடக்கும் பந்தலுக்கு சென்று, விசைத்தறியாளர்களுக்கு ஆத ரவு தெரிவித்தனர். தொடர்ந்து, விசைத்  தறியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும், என கட்சி யின் திருப்பூர், கோவை மாவட்டக் குழுக்கள் சார்பில், கருமத்தம்பட்டி நால்  ரோடு சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிபிஎம் சூலூர் தாலுகா  செயலாளர் ஏ.சந்திரன் தலைமை வகித்  தார். இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், கோவை  மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், திருப்பூர் மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி, விசைத்தறி தொழிலா ளர்கள் சங்க மாநிலத் தலைவர் பி. முத்துசாமி, சிபிஎம் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வி.தெய்வேந்திரன், கே.எஸ்.கனகராஜ், வி.ஆர்.பழனிச் சாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜெ.ரவீந்திரன், எஸ்.ஸ்டாலின் குமார், மணிகண்டன், கிளைச் செயலாளர்கள் கோபால், மாதவன், வாலிபர் சங்க நிர்வாகிகள் தினேஷ்ராஜா, குருசாரதி, கோகுலக்கண்ணன், கௌதமன் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டனர்.