சேலம், டிச.19- தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) மாநிலக் குழு கூட்டம் சேலத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். முன்னதாக அவர் செய்தியாளர் களிடம் கூறுகையில், “அரசுப் போக்கு வரத்து ஊழியர்களுக்கு 85 மாதங்க ளாக பஞ்சப்படி நிலுவையில் உள்ளது. சுமார் 86 ஆயிரம் பேருக்கு வரவேண் டிய சுமார் 2000 கோடி ரூபாயை அரசு இன்னும் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. அதேபோல பராமரிப்பு பணிக்கு தற்போது ஆள் இல்லை. இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்நிலை யில் பேருந்துகளை காண்ட்ராக்ட் முறை யில் எடுக்கலாமா? என அரசு யோசித்து வருகிறது. இது போன்ற நடவடிக்கை களை எதிர்த்து, போராட்டங்களை நடத்த தொழிற்சங்கத்தினர் திட்டமிட்டுள் ளோம். முதல் கட்டமாக மினி மாரத்தான் தொடர் ஓட்டம் மாநிலம் முழுவதும் நடத்த உள்ளோம்” என்றார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், கடந்த அதிமுக ஆட்சி காலத்திலிருந்து பத்து ஆண்டுகளாக இந்த பஞ்சப்படி நிலுவை தொடர்கிறது. தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக பஞ்சப்படியை விடு விக்க வேண்டும்.
தமிழக நிதியமைச்சர் அனைத்து துறைகளையும் ‘கார்ப்ப ரேட் மாடலாக’ மாற்ற முனைகிறார். கார்ப்பரேட் மாடல் பட்ஜெட் தமிழ கத்திற்கு உகந்ததல்ல. இதனால் கிரா மங்கள் அதிகம் உள்ள தமிழகத்தில் பாதிப்புகளும், வேலையின்மையும் அதிகரிக்கக் கூடும் என்றார். முன்னதாக நடைபெற்ற போக்கு வரத்து சம்மேளன குழு கூட்டத்தில் பொது போக்குவரத்தை பாதுகாக்க வலி யுறுத்தி மாரத்தான் போட்டி நடத்துவது எனவும், பட்ஜெட்டில் கூடுதல் நிதியை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்; போக்குவரத்து தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சனைகளை விளக்கிடும் வகை யில் மாநில பயிற்சி பட்டறை நடத்து வது; நாடாளுமன்றத்தை நோக்கி ஏப்ரல் 5ஆம்தேதி நடைபெற உள்ள மாபெரும் முற்றுகையில் போக்கு வரத்து தொழிலாளர்களும் பங்கேற்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், போக்குவரத்து சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயி னார், பொருளாளர் சசிகுமார், துணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன், சேலம் கோட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, தலைவர் செம்பான், பொருளா ளர் சேகர், துணை பொது செயலாளர் செந்தில் உள்ளிட்ட சம்மேளன குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.