சென்னை,ஜன.29- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப் ்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல், தொண்டை வலி ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்த வைகோ கொரோனா பரிசோ தனை செய்து கொண்டார். இதில் அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து சென்னை அண்ணா நகரில் உள்ள வீட்டில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். வீட்டில் இருந்தபடியே அவர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். டாக்டர்களின் அறிவுரைப்படி மருந்து- மாத்தி ரைகளை உட்கொண்டு வருகிறார். இது தொடர்பாக ம.தி.மு.க.வினர் கூறும் ்போது, “கடந்த சில நாட்களுக்கு முன்பு வைகோவுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்ட தாகவும், பின்னர் அது அதிகரித்து சளி தொல்லை அதிகமானதாகவும் தெரிவித் ்தனர். தற்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருப்பதாகவும்” கூறினர்.