சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு!
நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண் டரின் விலை ரூ. 50 உயர்த்தப்படுவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் அறி வித்துள்ளார். இந்த விலை உயர்வினால், மானிய விலையில் எரிவாயு சிலிண்டர் பெறுவோ ருக்கான எரிவாயு உருளை விலை, புது தில்லியில் ரூ. 853 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல சென்னையில் இதுவரை ரூ. 818-க்கு விற்பனையாகி வந்த சிலிண்டர் இனி ரூ. 868க்கு விற்பனை செய்யப்படும். மும்பையில் இனி 853 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். கொல்கத்தாவில் அதிகபட்சமாக ரூ. 879 ரூபாய்க்கு விற்பனையாகும். ஒன்றிய அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். “இந்த விலை உயர்வு சாதாரண மானி யம் பெறும் பயனாளிகளுக்கும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு உருளை பெறும் பயனாளிகளுக்கும் பொருந்தும்” என்று அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு உருளை பெறுவோருக்கு விலை ரூ.550 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, எரிவாயு சிலிண்டர் விலை மாதத்துக்கு ஒரு முறை அல்லது 15 நாட்க ளுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அண்மைக்காலமாக ஒவ்வொரு மாதமும் மாதத் தொடக்கத்தில் மாற்றிய மைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது எரிவாயு உருளை விலை மாற்றி அமைக்கப்
கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்திய மோடி அரசு
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை யை ரூ. 50 உயர்த்திய மோடி அரசு, பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை யும், லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தி அறி வித்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலை கள் உயரும் அபாயம் எழுந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண் ணெய் விலை கடுமையாக சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை சுமார் 4 சத விகிதம் குறைந்துள்ளது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட வேண்டும் என்று கோரிக் கைகள் எழுந்து வந்தன. குறைக்கப்பட லாம் என்றும் சந்தை வல்லுநர்கள் பலர் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். ஆனால், பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தி, அனைவருக்கும் மோடி அரசு அதிர்ச்சி யளித்துள்ளது. எனினும், பெட்ரோல், டீசல் விலை உயராது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்திருப்பதாக ஒன்றிய பெட்ரோ லிய அமைச்சகம் சமாளித்துள்ளது.