tamilnadu

img

சட்டம் -ஒழுங்கை கெடுக்க சதி: முதல்வர் குற்றச்சாட்டு

சென்னை,மார்ச் 14- வதந்தி பரப்பி, சட்டம் ஒழுங்கை கெடுக்க சில  அரசியல் சக்திகள் தகவல் தொழில்நுட்பத்தை பயன் படுத்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரி வித்தார். தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை  சார்பில் சென்னை, நந்தம் பாக்கம், வர்த்தக மையத்தில் செவ்வாயன்று (மார்ச் 14) நடைபெற்ற ஐம்பதாவது பிரிட்ஜ் கருத்தரங்கினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசுகை யில், “கையடக்க தொலை பேசியில் அனைத்து புத்த கங்களும் கிடைக்கின்றன. எல்லா துறைகளிலும் தொழில்நுட்பம் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.  தொழில் நுட்ப வளர்ச்சியால் கல்வி அறிவு விரல் நுனியில்  வந்துவிட்டது”என்றார். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்களில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. தரவுகள் தான் இந்த காலத் தின் முக்கிய எரிபொருள் என்றும் அவர் கூறினார். வதந்தி பரப்பி, சட்டம் ஒழுங்கை கெடுக்க சில அரசியல் சக்திகள் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். இளைய தலைமுறை தகவல் தொழில்நுட்பத்தை தங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆன்லைன் ரம்மி  விளையாட்டு மனித உயிர் களை பலிவாங்குகிறது. எனவே இளைய தலைமுறை யினர் தகவல் தொழில்நுட் பத்தை சரியாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றும்  முதல்வர் கேட்டுக் கொண்டார்.