tamilnadu

உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு செய்ய ஒன்றிய அரசு பரிசீலனை

புதுதில்லி,டிச.25-  உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற் படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு  மனுதாக்கல் செய்ய ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது.  சமீபத்தில் நகர உள்ளாட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல்களில் போட்டியிட இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க மகாராஷ்டி ரா மற்றும் மத்தியப்பிரதேச அரசுகள் முடிவு செய்தன. இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. ஓ.பி.சி. பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டை பொதுப் பிரிவினருக்கானது என்று அறிவித்த பின் தேர்தலை நடத்து மாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

 இதுகுறித்து டிவிட்டர் வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், உள்ளாட்சி அமைப்பு களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனுதாக்கல் செய்ய ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் நடைபெறும் சட்டப்போ ராட்டத்தில் ஒடிசா அரசு இணையவில்லை. மத்தியப்பிரதேச அரசு மற்றும் ஒன்றிய அரசு இணைந்து உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டப்போராட் டத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரி வித்துள்ளார். இடஒதுக்கீடு தொடர்பாக முடிவு செய்ய 3 விதமான சோதனை அளவுகோல்களை பின்பற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.