விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநில மாநாடு அறைகூவல்
புதுக்கோட்டை, பிப்.5- விவசாயத் தொழிலாளர், விவசாயிகள், தொழிலாளர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஏப்ரல் 5-ஆம் தேதி தில்லியில் நடைபெறும் பேரணியில் பெருந் திரளாகப் பங்கேற்பீர் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாடு புதுக்கோட்டையில் பிப்ரவரி 4, 5, 6 தேதிகளில் நடை பெற்று வருகிறது. இரண்டாம் நாளான ஞாயிற்றுக் கிழமை புதுக்கோட்டை கற்பக விநாயகா திருமண மண்டபத்தில் தோழர் ஜி.மணி நினைவரங்கில் பிரதிநிதிகள் மாநாடு தொடங்கியது. பிரதிநிதிகள் மாநாட்டுக்கு மாநிலத் தலைவர் ஏ.லாசர் தலைமை வகித்தார். அஞ்சலி தீர்மானத்தை மாநிலச் செயலாளர் எஸ்.பூங்கோதை வாசித்தார். வரவேற்புக்குழுத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., வரவேற்புரை யாற்றினார். மாநாட்டை தொடங்கி வைத்து அகில இந்தியத் தலைவர் ஏ.விஜயராகவன் உரையாற்றினார். வேலை அறிக்கையை மாநிலப் பொதுச்செய லாளர் வீ.அமிர்தலிங்கம், வரவு-செலவு அறிக்கையை மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர் ஆகியோர் முன்வைத்தனர். மாநாட்டை வாழ்த்தி தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் அ.பாஸ்கரன் பேசினார்.
ரூ.4லட்சம் கோடி ஒதுக்கீடு!
மாநாட்டில், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பாக இருக்கும் மாகாத்மா காந்தி தேசிய வேலை ஊரக உறுதித் திட்டத்தை சிதைக்கும் வகையில் தொடர்ந்து திட்டத்திற்கான நிதியை குறைத்துவரும் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசைக் கண்டிப்பதோடு, பட்ஜெட்டில் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தைப் பலப்படுத்தி, வருடாந்திர வேலை நாட்களை 200-ஆகவும், கூலியை 600-ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
‘தாலிக்கு தங்கம்’ திட்டத்தை மீண்டும் தொடருக!
தமிழ்நாடு அரசு 10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வழங்கி வந்த தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்தியுள்ளது. ஏழைக் குடும்பங்களுக்கு மிகுந்த உதவியாக இருந்த இத்திட்டத்தை தமிழக அரசு மீண்டும் தொடர வேண்டும். கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களை கடன் வலையில் விரித்து ஏராளமான நுண்நிதி நிறுவனங்கள் கந்துவட்டிக் கொள்ளையடிக்கின்றன. அரசு மேற்படி நிறு வனங்களின் அடாவடித்தனத்தைக் கட்டுப்படுத்து வதோடு, சுய உதவிக் குழுக்களுக்கு அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும். ஊரக தூய்மைப் பணி காவலர்களை பணி நிரந்தரம் செய்து மாதம் ரூ.18 ஆயிரம் ஊதியமும் சமூகப் பாதுகாப்பும் வழங்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் புலிகள் சரணாலயம், வனவிலங்கு சரணாலயம் என்பதன் பெயரில் வனவிலங்குகளை மட்டுமே பாதுகாப்பது என்ற எண்ணத்தில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் என்ற திட்டத்தை செயல்படுத்தினால் அப்பகுதி மக்கள் பாதிக்கப் படுவார்கள். எனவே, குமரி மாவட்டத்தில் ஒன்றிய, மாநில அரசுகள் உத்தேசித்துள்ள சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத் திட்டத்தை முற்றிலு மாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், விவசாயத் தொழிலாளர், விவசாயி கள், தொழிலாளர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஏப்ரல் 5-ஆம் தேதி தில்லியில் நடைபெறும் பேரணியில் பெருந்திரளாகப் பங்கேற்பீர் எனவும் மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.