விடுதலைப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிதாமகர்களில் ஒருவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தளகர்த்தர்களில் ஒருவர், தலைசிறந்த நாடாளுமன்றவாதி, சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த தலைவர், சிறையிலிருந்தே சட்டமன்றத் தேர்தலில் வென்ற மக்கள் தலைவர், இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் மூல விதைகளில் ஒருவர், அடக்குமுறைகளை அஞ்சாமல் எதிர்கொண்ட தீரர், பல்வேறு நூல்களின் ஆசிரியர், சிறந்த பேச்சாளர், அன்புத் தோழர் பி.ராமமூர்த்தியின் நினைவு நாள் இன்று. அந்த அற்புதத் தலைவன் காட்டிய வழி ஒளிவீசி நிற்கிறது! அவர் கண்ட கனவை நனவாக்க அயராது உழைப்போம்!