tamilnadu

img

கூட்டுச் செயல்பாட்டின் முன்னுதாரணம் தோழர் அ.ரங்கராஜன்

சென்னை, பிப். 15- கூட்டு செயல்பாட்டின் முன்னுதாரணமாக திகழ்ந்த வர் தோழர் அ.ரங்கராஜன் என அவரது நினைவஞ்சலிக் கூட்டத்தில் தலைவர்கள் புகழாரம் சூட்டினர். இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொது ச்செயலாளர் தோழர் அ.ரங்க ராஜன் (70) படத்திறப்பு விழா புகழஞ்சலிக் கூட்டம் இந்திய வங்கி ஊழியர் சம்மேளத் தின் சார்பில் சென்னையில் செவ்வாயன்று (பிப். 14) நடைபெற்றது. சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா, தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் கே.சுவாமி நாதன், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர்கள் ஐ.ஆறுமுக நயினார், ஜி.செல்வா, எம்.ராமகிருஷ்ணன், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத் தின் அகில இந்திய செய லாளர் கே.கிருஷ்ணன், இணைச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன், துணைத் தலை வர் ராஜகோபால், செய லாளர் பிரேமலதா, இந்தி யன் வங்கி ஊழியர்அசோசி யேஷன் மாநிலத் தலைவர் எஸ்.சுனில்குமார், பொதுச் செயலாளர் டி.ரவிக்குமார், வேணுகோபால், சேகர் (அதிகாரிகள் சங்கம்) உள்ளிட்ட சங்க நிர்வாகி கள், ரங்கராஜன் மனைவி பிர மிளா, மகள் நித்யா ஆகி யோர் பேசினர். தலைவர்கள் பேசியதன் சுருக்கம் வருமாறு: 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்று பின்னர் அதன் சித்தாந்தங் கள் பிடிக்காமல், பொது வுடைமை சித்தாந்தம்தான் சிறந்தது என்று தேர்வு செய்து  சமூக பணியாற்றத் தொடங்கி னார். வங்கி ஊழியர் பொதுச் செயலாளரான பிறகு விடு முறை நாட்கள் உட்பட பெரும்பாலான நேரம் சங்கப் பணிகளுக்காகவே செல வழித்தவர் தோழர் ரங்க ராஜன். உலகமயம், தனியார் மயம், தாராளமயம் என்கிற நாசகர பொருளாதார கொள்கை அமல்படுத்தப் பட்ட அந்த காலத்தில் பொதுச் செயலாளராக இருந்து கடும் சவால்களை எதிர்கொண்டு சங்கத்தை பலப்படுத்தினார். அதன் பாதிப்புகளை மிகவும் எளி மையாக ஊழியர்களிடம் விளக்குவார். அதேபோல் சுற்றறிக்கைகளை முதன் முதலில் தமிழில் அனுப் பியவர்.   சிக்கல்களை மிகத் திறமையாக சமாளிப்பவர். குடும்ப உறுப்பினர்கள் போல் ஊழியர்களிடம் பழகு வார். வங்கி பணி மட்டு மல்லாது தன்னை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யில் இணைத்துக் கொண்டு  சமூக பிரச்சனைகளுக் ்காகவும், ஏழை, எளிய மக்களுக்காகவும் பாடு பட்டார். 

 தவறுகளை துணிச்ச லுடன் சுட்டிக்காட்டுவார். எதிலும் தன்னை முன் நிறுத்திக் கொள்ளாமல் மற்ற வர்களை முன் நிறுத்துவார். தனக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும், எடுக் கப்பட்ட கூட்டு முடிவு களை சிறு சுணக்கம் கூட இல்லாமல் அமல்படுத்து வார். கூட்டு செயல்பாட்டின் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் ரங்கராஜன் என்று புகழாரம் சூட்டினர்.  அவர் ஏற்றுக் கொண்ட சித்தாந்தங்களையும், அவர் எந்த மதவாத சக்திகளுக்கு எதிராக போராடினாரோ அந்த பணிகளை அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுப் போம் என்றனர்.  பட்டுக்கோட்டை குறிச்சி யில் செயல்படும் இந்தியன் வங்கி அசோசியேஷன் பள்ளிக்கு மறைந்த அ.ரங்க ராஜன் மனைவி பரிமளா, மகள் நித்யா, மருமகன் எம்.சத்யன் ஆகியோர் 1 லட்ச ரூபாய் நிதி வழங்கினர்.