சென்னை,பிப்.4- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வெள்ளி க்கிழமை(பிப்.4) கடைசி நாள் என்பதால், திருவிழாபோல் கூட்டம் கூடியதால் டோக்கன் முறையில் வேட்பு மனு தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணை யம் நடவடிக்கை மேற்கொண் டது. தமிழ்நாட்டில் மாநகராட்சி கள், நகராட்சிகள், பேரூராட்சி கள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 12, 838 பதவியிடங்களுக்கு வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற வுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கி யது. வேட்பு மனு தாக்கலுக்கு பிப்ரவரி 4 ஆம் தேதி கடைசி நாளாகும். குறுகிய காலத்தில் தேர்தல் நடைபெறுவதால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு காலதாமதமானது.
திமுக தனது இறுதிக் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது. கடந்த புதன்கிழமை மட்டும் 10,153 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் பிப்.3 அன்று தேர்தல் அலுவலகங்களில் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர். இதனால் தேர்தல் அலுவலகங்கள் விழாக்கோலம் பூண்டது. வேட்பு மனு தாக்கல் நடைபெறும் இடங்களில் கட்சி நிர்வாகிகளிடையே மோதல் ஏற்படும் என்பதால் முன்னெச்ச ரிக்கையாக ஆவர்களை தடுக்கும் வகையில் காவல்துறை யினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய வெள்ளிக் கிழமை கடைசி நாள் என்பதால் மாலை 5 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது.
எனவே, மனு தாக்கல் செய்ய அதிக அளவில் கூட்டம் சேர்ந்தது. பல இடங்களில் தேர் திருவிழா பேன்று கூட்டம் கூடியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கூட்டத்தை தவிர்க்கும் வகையில் டோக்கன் முறையில் வேட்பு மனுக்களை பெறுவதற்கு தேர்தல் ஆணை யம் நடவடிக்கை மேற்கொண்டு ள்ளது. பிப் 5 ஆம் தேதி சனிக் கிழையான இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றுள்ளது. 7 ஆம் தேதி திங்கள் கிழமை அன்று வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள், அன்றே தேர்தலில் போட்டியிடவுள்ள இறுதி வேட்பாளர்கள் பட்டி யலை தேர்தல் ஆணையம் வெளி யிடவுள்ளது.