tamilnadu

img

சிபிஐ பொதுச் செயலாளராக மீண்டும் து.ராஜா தேர்வு

விஜயவாடா, அக்.18- விஜயவாடாவில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு அக்கட்சியின் பொதுச் செய லாளராக து.ராஜாவை (73) ஒரு மனதாக தேர்வு செய்தது.  இந்த மாநாட்டில் 11 உறுப்பினர் களைக் கொண்ட தேசிய செயற்குழு, 31 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வா கக் குழு மற்றும் 135 உறுப்பினர் களைக் கொண்ட தேசிய கவுன்சில் ஆகியவையும் தேர்ந்தெடுக்கப்பட்டன. பொதுச் செயலாளராக இருந்த எஸ்.சுதாகர் ரெட்டி 2019ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் ராஜினாமா செய் ததையடுத்து, து.ராஜாவை பொதுச் செயலாளராக தேசிய கவுன்சில் அறி வித்தது. 1994 முதல் கட்சியின் தேசிய  செயற்குழு உறுப்பினராக து.ராஜா இருந்து வருகிறார்.   ஜூன் 3, 1949 இல் வேலூர் சித்தாத் தூர் கிராமத்தில் விவசாயக் கூலித் தொழிலாளிகளான பி.துரைசாமி மற்றும் நாயகத்தி ஆகியோருக்கு மக னாக  ராஜா பிறந்தார். மோசமான வாழ்க்கைச் சூழலுக்கு எதிராகப் போராடி கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்  பொறுப்புக்கு உயர்ந்தார்.

பல நாட்கள் வெறும் வயிற்றோடு கிராமத்துப் பள்ளிக்கு வந்த அவருக்கு பல நாட்களில் ஆசிரியர்களின் உதவி யும் கிடைத்தது. பள்ளி நூலகப் புத்த கங்களில் இருந்து ரஷ்யப் புரட்சி மற்றும் லெனின் பற்றி அதிகம் அறிந்துகொண் டார். கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகி யோரின் எழுத்துக்களையும் படித்தார். அவர் பிரபல எழுத்தாளர்களான மக்சிம் கார்க்கி மற்றும் டால்ஸ்டாய் ஆகியோ ரைப் படித்தார். குடியாத்தம் ஜிடிஎம் கல்லூரியில் பட்டம் பெற்றார்.  கிராமத் திலிருந்து முதல் பட்டதாரி ஆனார் ராஜா. பின்னர் பி.எட் படிப்பை முடித்தார். அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (ஏஐஎஸ்எப்) மூலம் பொது வாழ்க்கைக்கு வந்தார். ஏஐஎஸ்எப் இன் தமிழ்நாடு மாநிலச் செயலாள ராகவும் (1975-80) அகில இந்திய பொதுச் செயலாளராகவும் (1985-90) பணி யாற்றினார். 1994இல் சிபிஐ தேசிய செய லாளர் ஆனார். 2007 மற்றும் 2013இல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார். அவரது புத்தகங்களில் தலித் கிறிஸ்தவர், வேலையின்மைக்கு எதிரான போராட்டம், வேலையின்மை பற்றிய புத்தகக் கடிதம் ஆகியவை அடங்கும். இவரது மனைவி ஆனி  ராஜா, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர். மகள் அபராஜிதா ராஜா ஏஐஎஸ்எப் தலைவராக உள்ளார்.