மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக பா.ஜ.,விற்குள் கலகம் வெடித்ததையடுத்து, கூட்டுறவுத் துறையின் முன்னணி அமைப்பான இஃப்கோவின் (IFFCO) இயக்குநர் தேர்தலில் அமித்ஷாவின் சொந்த வேட்பாளர் தோல்வியடைந் தார். பாஜகவின் கூட்டுறவுப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் பிபின் பட்டேல், முன்னாள் அமைச்சர் ஜெயேஷ் ராடாடியாவிடம் தோல்வியடைந்தார். முன்னதாக அமித் ஷா, ராடாடியாவின் வீட்டிற்குச் சென்று போட்டியில் இருந்து விலகுமாறு கேட்டுக் கொண்டார். பிபின் படே லுக்காக பாஜக மாநிலத் தலைவர் சி.ஆர் பாட்டீலும் நேரில் சென்றார். ஆனால் இவை எதுவும் பயனளிக்க வில்லை. இஃப்கோ தலைவரும் முன்னாள் எம்பியுமான திலீப் சங்கனியின் ஆதரவுடன் ராடாடியா வெற்றி பெற்றார். ராடாடியாவுக்கு 113 வாக்குகளும், பிபினுக்கு 64 வாக்கு களும் கிடைத்தன. சவுராஷ்டிரா பிராந்தியத்தில் உள்ள விவசாய கூட்டு றவு அமைப்புகள் ராடாடியாவுக்கு வலுவாக ஆதரவளித்தன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சி.ஆர்.பாட்டீலும், சங்கானியும் பகிரங்கமாக எதிர் எதிராக குற்றம் சாட்டினர். பாஜகவின் நலன்களுக்கு எதிராக சில தலைவர்கள் செயல்படுகிறார்கள் என்று சி.ஆர் பாட்டீல் கூறினார். காங்கிரஸில் இருந்து வெளியேறியவர்களுக்கு பதவி வழங்கும் பாஜகவின் புதிய பாணிக்கு ராடாடியாவின் வெற்றி பின்னடைவு என்று சங்கானி பதிலளித்தார். பிபின் பட்டேலை வேட்பாளராக யார் அங்கீகரித்தது என்று சங்கானி கேள்வி எழுப்பினார். அமித்ஷாவின் நம்பிக்கைக்குரியவர் பிபின் பட்டேல் என்பதை பாஜகவில் உள்ள அனை வரும் அறிந்த நிலையில் சங்கானி இவ்வாறு கிண்டல் செய்துள்ளார். வதோதரா மற்றும் சபர்காந்தா மக்களவைத் தொகுதிகளில் பாஜக அறிவித்திருந்த வேட்பாளர்களான ரஞ்சன் பட், பிகாஜி தாக்கூர் ஆகியோர் வாபஸ் பெற்றனர். வேட்பாளர் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வதோதரா முழுவதும் பதாகை கள் வைக்கப்பட்டதை அடுத்து ரஞ்சன் வாபஸ்பெற்றார். பிகாஜி தாக்கூர் ஜாதிப் பெயரை மாற்றிக் கொண்டதாக பாஜகவில் விவாதம் எழுந்துள்ளது.