சென்னை, ஜூலை 16 - நலவாரியக் குளறுபடிகளை கண்டித்து செவ்வா யன்று (ஜூலை 16) சிஐடியு நடத்திய போராட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பதிவுபெற்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் தர வேண்டும், ஆண்களுக்கு 60, பெண்களுக்கு 55 வயது பூர்த்தி யானது முதல் ஓய்வூதியம் தர வேண்டும், ஓய்வூதி யம் பெறும் தொழிலாளி மரணமடைந்தால் அவரது குடும்பத்திற்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை வழங்க வேண்டும், 60 வயது பூர்த்தி யடைந்த தொழிலாளிக்கு ஓய்வூதியம் தர வேண்டும், புதுப்பித்தல், ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம் போன்ற அனைத்து மனுக்களையும் விண்ணப்பிக்க தொழிற்சங்க நிர்வாகிகள் ஒப்புகை அளிக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும், ஆன்லைன் பதிவு அனைத்திற்கும் தொழிற்சங்கங் களுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும், தீபாவளி பண்டிகை கால போனஸ் தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், விபத்து எங்கு நடந்து இறந்தா லும் 5 லட்சம் ரூபாய் நிவாரணம் தர வேண்டும், கல்வி, திருமணம், ஓய்வூதியம், இறப்பு நிதி கோரும் விண்ணப்பங்களை அற்ப காரணங்களை கூறி அலை கழிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூலை 16) மாநிலம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சுற்றி வளைத்துக் கைது
இதன் ஒருபகுதியாக சென்னை மாவட்டக் குழுக்கள் சார்பில் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போராட்டம் நடத்த வந்தவர்களை காவல்துறையினர் வளைத்து வளைத்து கைது செய்தனர். பின்னர் தொழிலாளர் கூட்டம் அதிகரித்ததையடுத்து அவர்களையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றபோது தலைவர்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து டிஎம்எஸ் மெட்ரோ ஸ்டேசன் வாயிலில் அமர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சிஐடியு மாநிலப் பொதுச்செய லாளர் ஜி.சுகுமாறன், “அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில் தொழிலாளர் பதிவுகள் மட்டும் எப்படி காணாமல் போகும்? இதனைக் கேள்வி எழுப்பி போராடும் தொழிலாளர்களிடம் காவல்துறையின் அணுகுமுறை ஏற்கத்தக்கதல்ல. தமிழக அரசின் அணுகு முறையை கவலையோடு பார்க்கிறோம். இதற்கெதி ராக வலுவான போராட்டத்தை நடத்துவோம். டிஎம்எஸ் வளாகத்திற்குள் நடக்கும் போராட்டத்தை படிப்படியாக சாலையை நோக்கி தள்ளுகிறார்கள். அடக்கு முறைகளை தொழிலாளி வர்க்கம் உடைத்தெறியும். அடுத்தடுத்த போராட்டங்கள் இதற்கு பதில் சொல்லும்” என்றார். இந்தப் போராட்டத்தில் சிஐடியு மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் எஸ். கண்ணன், வி.குமார், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.கே. மகேந்திரன், வி. குப்புசாமி (வடசென்னை), எம். தயாளன், சி. திருவேட்டை (மத்திய சென்னை), பா. பாலகிருஷ்ணன், ஏ. நடராஜன் (தென்சென்னை) உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காவல்துறை அராஜகத்திற்கு சிஐடியு கண்டனம்
நலவாரியங்களில் உள்ள குளறுபடிகளை களைய வலியுறுத்தி தொழிலாளர் ஆணையர் அலுவலக வளாகத்தில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடத்தி, ஆணையரை சந்திப்பது என காவல்துறைக்கும், தொழிலாளர் ஆணையருக்கும் எழுத்துப் பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்படி ஜூலை 16 அன்று காலை டிஎம்எஸ் வளாகத்திற்கு சென்ற தென் சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டத்திற்கு வருபவர்களை அடையாளங்கண்டு ஆங்காங்கே 52 பேர் வரை கைது செய்தனர். அதன்பிறகு பெருமளவில் திரண்டு முறையிட்ட பிறகு டிஎம்எஸ் மெட்ரோ வளாகம் முன்பு 20 நிமிடம் போராட்டம் நடத்த அனுமதித்தனர். கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிப்பதாகவும் தெரிவித்தனர்.
ஜனநாயக உரிமைகள் மறுப்பு
ஜனநாயக உரிமைகளை மறுப்பது, நசுக்குவது போன்ற செயல்களில் காவல்துறை ஈடுபடுவது சரியல்ல. தொழிலாளர்கள் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் முறையிடாமல் வேறு எங்கு முறையிடுவது? குறிப்பாக, கடந்த எட்டு மாத காலமாக நலவாரிய செயல்பாட்டில் ஏராளமான குளறுபடிகள், 72 லட்சம் தரவுகள் காணாமல் போய்விட்டது என எவ்வித அச்சமின்றி அதிகாரிகள் தெரிவித்து, தொடர்ச்சியாக சர்வர் வேலை செய்யவில்லை என்று சொல்வது வாரியத்தை முடக்கக்கூடிய செயலாகும். எனவே, தொழிலாளர் ஆணையர் இப்பிரச்சனையில் தலையிட வேண்டுமென்பதை வலியுறுத்தித்தான் இந்தப் போராட்டம் நடை பெற்றது. இதுநாள் இல்லாத வகையில் இப்பிரச்சனையில் சென்னை காவல் துறை நடந்து கொண்ட விதம் கண்டனத்துக்குரியது. சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து....