tamilnadu

img

பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க தொடர்ந்து போராட வேண்டும்

சென்னை, ஆக. 8- ஐசிஎப், ரயில்வே உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாக்க தொடர்ந்து போராடுவோம் என அனைத்து தொழிற்சங்க தலைவர்களிடம் சிஐடியு அகில இந்திய தலைவர் டாக்டர் கே.ஹேம லதா கேட்டுக் கொண்டார். ஐசிஎப் எல்.ஹெச்.பி - பர்னிஷிங் தொழிற்  சாலையை சிஐடியு அகில இந்திய தலைவர்  டாக்டர் கே.ஹேமலதா பார்வையிட்டார். பின்  னர் ஐசிஎப் பொதுமேலாளர் பி.ஜி.மல்லை யாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசி னார். அப்போது உள்நாட்டு தயாரிப்பான வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் உற்பத்தியில் சாதனை படைத்ததற்கு வாழ்த்து தெரி வித்தார். மேலும் போதுமான நிரந்தர தொழி லாளர்களை நியமித்து ஐசிஎப் உற்பத்தி தொழிற்சாலையை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்போது ஐசிஎப் பொதுமேலாளர் கூறு கையில், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சாதாரண மக்கள் பய ணிக்கும் வகையில் புதிய வந்தேபாரத் போன்ற கூடுதல் வேகத்தில் செல்லும் எலக்ட்ரிக்கல் புறநகர் ரயில்கள் உற்பத்தி துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. வளர்ந்து வரும் சர்வதேச நவீன ரயில்  பெட்டி உற்பத்தி தொழில்நுட்ப மாற்றங்கள் ஐசிஎப் தொழிற்சாலையிலும் அமல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரி வித்தார்.

முன்னதாக அவருக்கு டிஆர்இயூ செயல்  தலைவர் அ.ஜானகிராமன், சிஐடியு மத்திய  சென்னை மாவட்டச் செயலாளர் சி.திரு வேட்டை, துணைத் தலைவர் எஸ்.சந்தா னம், ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனி யன் (சிஐடியு) தலைவர் சி.சத்தியமூர்த்தி, பொதுச் செயலாளர் பா.ராஜாராமன், பொரு ளாளர் கே.டி.ஜோஷி, செயல் தலைவர் வி.எம்.கிருஷ்ணகுமார், கவுரவத்தலைவர் எஸ்.ராமலிங்கம், கேன்டீன் இயக்குநர் ஜி.நட ராஜன், இணைப் பொ‌துச் செயலாளர் ந. வேலாயுதம், ஏ.சாண்டில்யன், துணைத் தலைவர் சுரேஷ், ஆலோசகர் வே.மோகன்,  துணைச் செயலாளர்கள் பிரான்சிஸ் மெகோல்டு, டி.ரமேஷ்பாபு. எஸ்.ஜெ.தங்க ராஜ், பர்னிஷிங் டிவிசன் தலைவர் ஏ.செல்வ ராசன், செயலாளர் எம்.பாஸ்கரன், ஷெல்  டிவிசன் பொருளாளர் டி.வெங்கடேஷ், துணைச் செயலாளர் ஜே.கதிரவன் மற்றும் எல்எச்பி கிளை நிர்வாகிகள் ஆனந்த் பாபு, மகேஷ், ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராள மானோர் உற்சாக வரவேற்பளித்தனர். பெண்  தொழிலாளர்கள் சால்வை அணிவித்து மரி யாதை செலுத்தினர். எல்எச்பி டிவிசன் உயர் அதிகாரி (துணைத் தலைமை) மெக்கானிக்கல் என்ஜி னியர் மோகன் சால்வை அணிவித்து வாழ்த்து  தெரிவித்தார். பர்னிஷிங் டிவிசன் ஷாப் 30இல் ஐசிஎப் திமுக லேபர் யூனியன் (தொமுச) பொதுச் செயலாளர் வ.முரளிதரன், என்எப்ஐஆர் ஐஎன்டியூசி தலைவர் டி.எம்.செந்தில்குமார், கார்த்திக், பன்னீர்செல்வம் (ஏஐஆர்எப்) ஏஐடியுசி பொதுச் செயலாளர் சரவணன், பாண்டியன், பார்த்தசாரதி (எஐஓபிசி அசோ சியேசன்), மணிமாறன் (ஏஐ எஸ்சி.எஸ்டி  அசோசியேசன்), கே.கோபிநாத், கே.வி‌.ரமேஷ் (ஐஆர்டிஎஸ்ஏ), அண்ணா தொழிற் சங்க பொதுச் செயலாளர் தனேஷ்குமார் ஆகியோர் சால்வை அணிவித்து மரியாதை  செலுத்தினர். அப்போது ஐசிஎப் அனைத்து தொழிற் சங்க தலைவர்களிடம் அனைவரும் ஒன்றி ணைந்து ஐசிஎப், ரயில்வே உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாக்க  தொடர்ந்து போராடுவோம் என்று ஹேம லதா கேட்டுக் கொண்டார்.