tamilnadu

img

பொன்னமராவதியில் வேலை நிறுத்தம், மறியலை விளக்கி சிஐடியு பிரச்சாரம்

பொன்னமராவதியில் வேலை நிறுத்தம்,  மறியலை விளக்கி சிஐடியு பிரச்சாரம்  

பொன்னமராவதி, மே 15-  பொன்னமராவதியில் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கண்டித்து மே 20 ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தம், மறியல் போராட்டத்தை விளக்கி பொன்னமராவதியில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.  பொன்னமராவதி பேருந்துநிலையம் முன்பாக நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்திற்கு தமிழ்நாடு சாலையோர விற்பனையாளர்கள் சங்கத்தின் சிஐடியு ஒன்றிய செயலாளர் தீன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சாத்தையா, கனி, கண்ணன், சௌந்தரம் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் மாரிக்கண்ணு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க பொறுப்பாளர் நல்லதம்பி, ஏஐடியுசி  நிர்வாகிகள் ஏனாதி ஏ.எல். ராசு, ரெங்கையா ஆகியோர் அகில இந்திய வேலை நிறுத்தத்தை விளக்கி பேசினர். சிஐடியு மாவட்டத் தலைவர் முகமது அலி ஜின்னா நிறைவுரையாற்றினார்.