tamilnadu

ரூ.19.80 கோடியில்  96 காவலர் குடியிருப்புகள் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரூ.19.80 கோடியில்  96 காவலர் குடியிருப்புகள் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, மார்ச் 29 - சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ரூ.8.71 கோடியில்  கட்டப்பட்டுள்ள 50 காவலர் குடியிருப்புகள், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ரூ.9.34 கோடியில் கட்டப் பட்டுள்ள 46 காவலர் குடியிருப்புகள் என ரூ.19.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 96 காவலர் குடியிருப்புகள் மற்றும்  2 காவல் நிலையங்கள் ஆகியவற்றை சென்னை தலைமைச்  செயலகத்திலிருந்து காணொலி மூலம் சனிக்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதேபோல், சென்னை துரைப்பாக்கத்தில் ரூ.1.20 கோடி யளவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 6 குடியிருப்புகள், மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் ரூ.1.10 கோடியில் கட்டப்பட்டுள்ள தீய ணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 2 குடி யிருப்புகள், ராணிப்பேட்டையில் ரூ.4.27 கோடியில் கட்டப் பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 19 குடியிருப்புகள், திருச்சி மாவட்டம், துறையூரில் ரூ.3.53 கோடியில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 18 குடியிருப்புகள் என மொத்தம் ரூ.21.51 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும்  மீட்புப் பணிகள் துறைக்கான கட்டிடங்களையும் முதல மைச்சர் திறந்து வைத்தார். மேலும், காவல்துறையின் பயன்பாட்டிற்காக 500 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 300 நான்கு சக்கர வாகனங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் பயன் பாட்டிற்காக 50 நீர்தாங்கி வண்டிகள், 10 ஜீப்புகள் மற்றும்  50 இருசக்கர வாகனங்களின் சேவைகளையும் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.