இராமநாதபுரம்,ஆக.18- பிரதமர் மோடி ஆட்சியின் பலவீனத் தால்தான் தமிழக மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல் நடத்துகிறது என்று மீனவர்கள் நல மாநாட்டில் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி னார். இராமநாதபுரம் மாவட்டம், மண்ட பத்தில் தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் சார்பில் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 18 வெள்ளியன்று நடைபெற்றது.
தாக்குதல் அதிகரிப்பு
மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் உரையாற்றினார். அப்போது அவர், “தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை படை தொடர்ந்து தாக்குவதை மீனவர்கள் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்பான தாக்குதல் அதிகரித்து வருகிறது. 2014 இல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மீனவர்கள் மீதான அடக்குமுறை இன்னும் அதிகமாகி உள்ளது. தமிழ்நாட்டு மீனவர் களை இலங்கை படையினர் தாக்குவது, வலைகளை அறுத்து எறிவது தொடர்கதை யாகியுள்ளது. பிரதமர் மோடி ஆட்சி பலவீனமாக இருப்பதால் மீனவர்கள் மீதான இலங்கை படை தாக்குதல் தொடர்கிறது. இந்த ஆண்டில் மட்டும் 74 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். 83 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு ஒன்றிய பாஜக ஆட்சியே பொறுப்பு. 2014, 2015, 2016 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல் நடத்தியது. ஒவ்வொரு முறையும் ஒன்றிய அரசுக்கு நான் கடிதம் எழுதிய பிறகுதான் நடவடிக்கை எடுக்கின்ற னர்” என்று சாடினார். மேலும், கச்சத்தீவு பற்றி விரிவாகப் பேசிய முதல்வர், “கச்சத்தீவுக்காக நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுகதான். தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் விஷ யத்தை அதிமுக எப்போதும் தெளிவாகச் செய்கிறது. இலங்கைக்கு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதாக கச்சத்தீவை பற்றி அடிப்படை அறிவு இல்லாமலும் குறைந்த பட்ச நேர்மை இல்லாமலும் உண்மைக்கு மாறாக சிலர் பேசி வருகின்றனர். இந்தியாவின் ஒரு பகுதியை மாநில அரசான திமுக தாரைவார்த்தது என அடிப்படை ஞானமின்றி பேசுகின்றனர். கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கையில் ஒன்றிய அரசு ஈடுபட வேண்டும்” என்றார்.
மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரமாக உயர்வு
மீனவர் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கீழ்க்கண்ட 10 அறிவிப்புகளை வெளியிட்டார்.
1. 60 வயதுக்கு மேற்பட்ட 15 ஆயிரம் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் 5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
2. மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தில் 5,035 பேருக்கு வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும்.
3. 45 ஆயிரம் மீனவர்களுக்கு மீன்பிடித் தொழிலுக்கான கூட்டுறவு கடன் வழங்கப்படும்.
4. தூத்துக்குடி, நெல்லை மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் 3,400 லிட்டரில் இருந்து 3,700 லிட்டராக அதிகரிப்பு.
5.காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் தினசரி உதவித்தொகை ரூ.250 இலிருந்து ரூ.350ஆக உயர்த்தி வழங்கப்படும்.
6. மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவுகள், தடுப்புச்
சுவர்கள் அமைக்கப்படும்.
7. மீனவ பெண்கள் கடல் பாசி வளர்ப்பில் ஈடுபட்டு வருவாயை பெறுக்க கடல் பாசி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
8. மீனவர் விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் 250 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு.
9. ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்களுக்கு 40 சதவீத மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்படும்.
10. விசைப்படகுகளுக்கு 18 ஆயிரம் லிட்டர் மானிய டீசல், நாட்டுப்படகுகளுக்கு 4 ஆயிரம் லிட்டர் மானிய டீசல் வழங்கப்படும். மீனவர்களின் இதர கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றித் தரப்படும் என்று முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.