சென்னை, நவ. 17- மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா வீட்டிற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழ னன்று (நவ. 17) நேரில் சென்று ஆறுதல் கூறினார். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும், கால் பந்து விளையாட்டு வீராங்கனை யுமான பிரியா கால் வலியால் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொளத்தூர் மருத்து வமனையில் தவறான சிகிச்சை அளிக் கப்பட்ட காரணத்தால் அவர் பரிதாப மாக உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த பிரியா வின் வீட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார். பிரியாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர், பெற்றோரி டம் பிரியாவின் சாதனைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், கால்பந்து போட்டியில் பிரியா வாங்கிக் குவித்த பதக்கங்களை பார்வையிட்டார். இதையடுத்து, அரசு அறிவித்திருந்தது போன்று, பிரியாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம், அரசு சார்பாக வீடு ஒதுக்கப்பட்டதற்கான அரசாணை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான ஆணையை முதலமைச்சர் பிரியாவின் பெற்றோரிடம் வழங்கினார். மேலும் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் வெளி யிட்டுள்ள பதிவில், கால்பந்தாட்ட வீராங்கனைவின் மரணம் தாங்க முடியாத துயரம். ஏற்றமிகு உயரத்தை எட்டவிருந்த திறமைசாலி யான அவரது இழப்பு, அவரது குடும்பத்திற்கும், மாநில விளையாட் டுத் துறைக்கும் ஏற்பட்ட மாபெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் குடும் பத்தினருக்கு அரசு அனைத்து வழிகளி லும் உதவியாய் நிற்கும். இவை அனைத்தும் பிரியாவின் உயிர்க்கு ஈடா காது என அந்த பதிவில் முதல்வர் கூறி யுள்ளார்.