tamilnadu

img

ரூ.131 கோடி நிதி திரட்டிய சென்னை ஐஐடி

சென்னை, மே 16- சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி நிதியுதவி மற்றும் சமூகம் சார்ந்த திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவதற்காக, முன்னாள் மாணவர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறு வனங்களிடம் இருந்து முன்  எப்போதும் இல்லாத வகை யில் அதிகத் தொகையாக 2021-22ம் நிதியாண்டில் ரூ.131 கோடியைத் திரட்டி யுள்ளது. சென்னை ஐஐடி-யில்  அர்ப்பணிப்புடன் பணியாற் றும் வல்லுநர்களைக் கொண்ட முன்னாள் மாண வர்கள் மற்றும் கார்ப்ப ரேட் உறவுகள் அலுவலகம்  கார்ப்பரேட் நிறுவனங்கள்,  முன்னாள் மாணவர்கள்  மற்றும் நன்கொடையா ளர்களை ஒருங்கிணைத்து நன்கொடை திரட்டும் பணி யில் ஈடுபட்டு வருகிறது. கொரோனா நோய்த் தொற்று காலத்திலும்  திரட்டப் பட்ட தொகை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ளது. சமூகப் பொறுப்புணர்வுத் திட்டம் வாயிலாக சென்னை ஐஐடி- க்கு நன்கொடை நிதி வழங்கும் கார்ப்பரேட் நிறு வனங்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் இரு மடங்காக பெருகியுள்ளது. பெருநிறுவனங்கள் சமூகப்  பொறுப்புணர்வு ஒத்து ழைப்பு மூலம் திரட்டப்பட்ட ரூ.131 கோடியில் ஏறத்தாழ பாதித்தொகை கடந்த நிதியாண்டில் தான் பெறப்பட்டுள்ளது. உலகம் முழுவதுமுள்ள சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்க ளிடம் இருந்து கொரோனா நிவாரணத் திட்டங்களுக்காக ரூ.15 கோடியை (ஏறத்தாழ 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) இக்கல்வி நிறுவனம் திரட்டியது. வெண்டிலேட்டர், ஆக்சிஜன் செறிகூட்டல் இயந்திரம் போன்ற அத்தியாவசிய மருத்துவ சாதனங்களை தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநில  அரசுகளுக்கு வழங்க இந்தத்  தொகை பயன்படுத்தப் பட்டது.