சென்னை,செப்.17- அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரத்தில் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் கடந்த மாதம் மூட நம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு சொற்பொழிவு வழங்கிய விவகாரம் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் 2 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதனுடன் சொற்பொழி வாளர் மகாவிஷ்ணுவை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மறுபுறம் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தலைமையிலான அதிகாரி கள் குழுவும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்துவந்தது. அதன்படி அசோக் நகர், சைதாப் பேட்டை பள்ளிகளின் தலைமை ஆசிரி யர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் எஸ்எம்சி உறுப்பினர்களிடம் நிகழ்ச்சி தொடர்பாக இயக்குநர் குழு விசாரணை நடத்தியது. நிகழ்ச்சிக்கு மகாவிஷ்ணுவை யார் பரிந்துரை செய்தது, அதற்கு முன் அனுமதி பெறப்பட்டதா என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப் படையில் தயாரிக்கப்பட்ட விசாரணை அறிக்கையானது தமிழக அரசிடம் கடந்த செப்13அன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அ.மார்ஸ் ஒப்புதலின் பெயரிலேயே இந்த 2 அரசுப் பள்ளிகளிலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. பள்ளிகளில் இத்தகைய செயல்பாடுகளுக்கு அனுமதி பெறுவது உறுதிப்படுத்தப்பட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் போன்ற பல்வேறு பரிந்துரை கள் இடம் பெற்றிருந்தன. அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தற்போது சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதி காரி மார்ஸ் மீது பணியிட மாறுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் தஞ்சை சரபோஜி மன்னர் நூலகத் தின் அலுவலராக மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.