tamilnadu

img

அஞ்சல் துறை தேர்வுக்கு தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாதா?

படிவத்தை உடனடியாக மாற்றுங்கள்

அஞ்சல் துறை செயலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கடிதம்

மதுரை, பிப்.7- அஞ்சல் துறை தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் விண் ணப்பிக்க முடியாதபடி உள்ள தேர்வு படிவத்தை உடனடியாக மாற்றுங்கள் என அஞ்சல் துறை  செயலாளருக்கு மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதி யுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது: ஒன்றிய அரசுத் துறைகளின் பணி நியமனங்களில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தமிழ் தேர்  வர்கள் இன்னல்களுக்கு ஆளா வது நடந்தேறுகிறது. ஒரு வார  காலமாக அஞ்சல் துறை நிய மனங்களில் இந்த அலைக் கழிப்பு இருந்து வருகிறது. ஜன வரி 27 முதல் ஆன்லைன் விண்  ணப்பங்கள் அனுப்பலாம் என் றாலும் கிராமின் டாக் சேவக் (GDS) காலியிடங்களுக்கு விண்  ணப்பிக்க முடியாமல் தமிழ்நாடு மாநில தேர்வு முறைமையில் 10-ஆம் வகுப்பு தேறிய தேர்வர் கள் தவித்து வருகிறார்கள்.

இந்தியா முழுவதும் 40 ஆயி ரம் கிராமின் டாக் சேவக் (GDS)  காலியிடங்களுக்கு பணி நியம னங்களை அஞ்சல் துறை மேற்  கொள்ளவுள்ளது. அவற்றில் தமிழ்நாட்டில் உள்ள காலி யிடங்கள் 3167. 10-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.  எனவே, ஆன்லைன் விண் ணப்பத்தில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் பாட வாரியாக கேட்கப்பட்டு உள்ளது. மாநில  பாட முறையில் தமிழ், ஆங்கி லம், கணக்கு, அறிவியல், சமூக  அறிவியல் ஆகிய 5 பாடங்களே உண்டு. ஆனால் ஆன்லைன் விண்ணப்பத்தில் 6-ஆவது பாடமும் இடம் பெற்றுள்ளது. அது ‘‘தெரிவு மொழி’’ என்பது  மற்ற மாநிலங்களில் இது இருக்கி றது. ஆகையால் பிற மாநில தேர்வர்களுக்கு பிரச்சனை இல்லை.  6-ஆவது பாடமே இல்லாத,  இரு மொழித் திட்டம் நடைமுறை யில் உள்ள தமிழ்நாடு தேர்வர்கள் என்ன செய்வார்கள். 6-ஆவது  பாட விவரங்களை நிரப்பாவிட் டால் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய ஆன்லைன் முறைமை விடவில்லை. இந்தியா முழுமை யும் தேர்வுகளை நடத்தும் போது  மாநிலங்களில் உள்ள பிரத்யேக  சூழல்கள் கணக்கில் கொள்ளப் படாதது. 

அதிலும் குறிப்பாக மொழி குறித்த அணுகுமுறையில் காட்டப்படும் அலட்சியம் வருத் தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது. எத்தனை துறைகளில், எத்தனை நியமனங்களில் தமிழ் நாடு தேர்வர்கள் இத்தகைய பிரச்சனைகளை தொடர்ந்து எதிர்கொள்கிறார்கள் என்பது வெளிப்பட்டுக் கொண்டே இருக்  கிறது.  ஜனவரி 27 விண்ணப்ப தேதி  ஆரம்பித்து 9 நாட்கள் ஓடி விட்  டன. இன்னும் கடைசி தேதியான  பிப்ரவரி 16 க்கு 10 நாட்களே உள்  ளன. இதற்கு இன்னும் தீர்வு  இல்லை. இதுகுறித்து அஞ்சல்  துறை செயலாளர் வினீத் பாண்டே, தமிழ்நாடு தலைமைப்  பொது மேலாளர் பி.செல்வக் கமார் ஆகியோருக்கு கடிதங் களை எழுதியுள்ளேன்.  உடனடியாக ஆன்லைன் விண்ணப்பத்தில் 6-ஆவது பாட  விவரம் கட்டாயமாக கேட்கப்படு வது மாற்றப்பட வேண்டும். 9 நாட்கள் வீணாகி இருப்பதால் விண்ணப்ப காலக்கெடு நீட்  டிக்கப்பட வேண்டும். விண்ணப்  பங்களில் திருத்தம் செய்ய பிப்ரவரி 17 முதல் 19 வரை தரப்  பட்டுள்ள காலமும் நீட்டிக்கப்பட வேண்டும்.  இது துறையின் தவறு என்ப தால் இந்த குறிப்பிட்ட கார ணத்தால் எந்தவொரு விண்ணப் பமும் நிராகரிக்கப்பட்டு விடக் கூடாது. விரைவில் எனது கடி தத்திற்கு உரிய பதில் வரும்,  தமிழ்நாடு தேர்வர்கள் தவிப்பு  தீர்க்கப்படும் என எதிர்பார்க்கி றேன்.  இவ்வாறு தனது கடிதத்தில் கூறியுள்ளார்.