இராமநாதபுரம், மார்ச் 28- சிக்கல் ஊராட்சியை மையமா கக் கொண்டு ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என்று சிக் கல் ஒன்றிய மேம்பாட்டு குழு கோரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெய லலிதா, இராமநாதபுரம் மாவட் டம் சிக்கல் கிராமத்தை மையப் படுத்தி ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும் என்று 2012 இல் அறிவித்தார் .2021 திமுக தேர்தல் அறிக்கையில் சிக்கல் ஊராட்சி யை மையப்படுத்தி ஒன்றியம் அமைக்கப்படும் என்ற வாக்குறு தியை நிறைவேற்றுவோம் என்று முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பி னரும் அமைச்சருமான ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் பத்திரிகையா ளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்நிலையில் கடலாடி ஒன்றி யத்தை பிரித்து சிக்கல் ஊராட்சி யை மையப்படுத்தி ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும் என்ற உறுதியை செயல்படுத்த வேண் டும் என்று வலியுறுத்தி இராமநாத புரம் மாவட்ட ஆட்சியரிடம் சிக் கல் ஒன்றிய மேம்பாட்டுக் குழு சார்பாக மனு அளிக்கப்பட்டது. மேம்பாட்டுக்குழு தலைவர் மிசா சைபுதீன், செயலாளர் கே.பச்ச மால், பொருளாளர் எம். ஆறு முகம் மற்றும் உசைன் கனி, மங்க ளசாமி உள்ளிட்டோர் மனு அளித் தனர்.
அந்த மனுவில், கடற்கரை கிராமங்களை உள்ளடக்கிய 60 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இசிஆர் சாலையில் அமைந்துள்ள சிக்கல் ஒன்றியத் துக்குட்பட்ட பகுதிகளில் 30 ஊரா ட்சிகள் உள்ளன. 12 ஊராட்சி வார்டுகள், ஐந்து காவல் நிலையங்கள், தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனம் உள்ளன. உப்பு நிறுவனத்தில் 2600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி யாற்றுகின்றனர். மூன்று சோலார் மின் உற்பத்தி நிறுவனங்கள், சிக்கல், ஏர்வாடி மற்றும் மேலச் செல்வனூர் ஆகிய மூன்று வரு வாய் உட்கோட்டங்கள் உள்ளன. பெரும் நிலப்பரப்பில் இப்பகுதி விவசாயம் முக்கிய பங்கு வகிக்கி றது. ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி, மூன்று கிராம கூட்டுறவு வங்கிகள் ,ஒரு அரசு உயர் நிலைப்பள்ளி, நான்கு மேல் நிலைப்பள்ளி, ஒரு மேம்படுத் தப்பட்ட மையம், ஐந்து சுகாதார நிலையங்களும் 15 துணை சுகா தார நிலையங்களும் மற்றும் கீழ செல்வனூர் பறவைகள் சரணால யம், சிக்கல் அருகே ஏர்வாடி தர்கா, வாலிநோக்கம் கப்பல் உடைக்கும் தளம், பவளப்பாறை தீவுகள், மன்னார் வளைகுடா சுற் றுலா தலங்கள் உள்ளடக்கிய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு சிறப்புமிக்க சிக்கல் நகரை மையப்படுத்தி தமிழ்நாடு அரசு ஊராட்சி ஒன்றியம் அறி விக்க வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டுள்ளது.