தென் மாநிலங்களை ஒதுக்கும் ஒன்றிய அரசு!
சென்னை: “தொகுதி மறுசீரமைப்பு என்பது தென் மாநி லங்களை ஓரங்கட்டும் செயல்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மாநில உரி மைகளுக்கான சட்டப்போராட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு என்பது ஒரு மைல்கல். மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட அரசையும் உறுப்பினர்களையும் கொண்ட சட்ட மன்றத்தின் தீர்மானம் தான் வலிமையானது. நியமனப் பதவியில் இருக்கும் ஆளுநர் என்பவர் சட்டமன்றத்தில் நிறை வேறிய மசோதாவுக்கு ஒப்புதலளிக்கக் கடமைப்பட்டவர் என்பதை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்துள்ளது” என்றும் தெரிவித்திருக்கிறார்.
சிபிஎஸ்இ தேர்வு: சென்னை மண்டலம் 97.39 சதவிகிதம் தேர்ச்சி!
சென்னை: நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) கீழான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை (மே 13) வெளியானது. இதில், சென்னை மண்டலத்தில் தேர்வெழுதிய மாணவ - மாணவியரில் 97.39 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர். வழக்கம்போல் இந்தாண்டும், மாணவர்களை விட, மாணவியரின் தேர்ச்சி விகிதம் 5.94 சதவிகிதம் கூடுத லாகும். விஜயவாடா மண்டலத்தில் 99.60 சதவிகித மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னையில் 6-ஆவது நீர்த் தேக்கம்
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்பின்படி, கோவளம் அருகே பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலைகளுக்கு இடையே ரூ. 471 கோடி செலவில் 4,375 ஏக்கர் பரப்பளவில் 1.6 டிஎம்சி கொள்ள ளவு கொண்ட நீர்த் தேக்கம் அமையவுள்ளது. இது சென்னை யின் 6-ஆவது நீர்த் தேக்கமாக இருக்கும். இதற்கான கட்டு மானப் பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத்துறை விண்ணப்பம் செய்திருக்கிறது.
பெண்களுக்கு அரசு துணை நிற்கும்
சென்னை: “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. பெண்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து தைரியமாக புகார் அளித் தால் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இந்த தீர்ப்பு அளித்துள்ளது. குற்றவாளிகள் மேல்முறையீட்டுக்கு சென் றால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக அவர்களுக்கு நீதி கிடைக்க தமிழக அரசு துணை நிற்கும்” என்றும், திமுக ஆட்சிக்கு வந்தால் பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்க ளுக்கு நியாயம் கிடைக்கும். குற்றவாளிகள் தண்டிக்கப்படு வார்கள் என சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றி யுள்ளார் என்றும் திமுக எம்.பி., கனிமொழி தெரிவித்திருக் கிறார்.
தமிழக வரலாற்றின் கருப்பு பக்கம்
சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது நடந்த, பெண்களுக்கு எதிரான இந்த கொடூரம் தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கருப்பு பக்கம். குற்றவாளிகளை காப்பாற்ற நடந்த முயற்சிகளை மக்களின் துணையோடு திமுக முறியடித்ததும் நீதி கிடைக்க காரணம்” என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை மணி
சென்னை: குற்றமிழக்க முற்படும் கயவர்களுக்கு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு ஓர் எச்சரிக்கை மணியாக இருக்கும் என நம்புகிறேன் என்று பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
சிறப்பு மிக்க தீர்ப்பு
சென்னை: பாலின சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் கோவை மகளிர் நீதிமன்றம், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 குற்றவாளி களுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி யிருப்பது, போராடும் பெண்களுக்கு வாளும், கேடயமுமாக உதவும் இந்த சிறப்பு மிக்க தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற் கிறேன் என்று மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்திருக்கிறார்.
அதிமுக நகைச்சுவை
சென்னை: பொள்ளாச்சி வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையால், குற்ற வாளிகளுக்கு (அதிமுக நிர்வாகிகள் உட்பட) தண்டனை கிடைத்து நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது என்று அதிமுக வெளியிட்டிருக்கும் அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்புக்கு வரவேற்பு
சென்னை: பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பை வரவேற்று இருக்கும் பிரேமலதா விஜயகாந்த், இந்த தீர்ப்பை உதாரணமாக எடுத்துக் கொண்டு, இனி வரும் காலங்களில் இளைஞர்கள் இதுபோன்ற தவறு களை செய்யாமல் கண்ணியத்தோடு இருக்க வேண்டும் என்று கூறி யுள்ளார். மேலும், பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பை வரவேற்ப தாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.